பக்கம் எண் :

362மாறனலங்காரம்

வங்கூழுயிர்த்தரவரிப்பதினதன்மேற்
கண்ணகலிருவிசும்பொழிவில்காரணமா
மண்முதலனைத்தையும்வளைத்தாவரிப்ப
வகல்விசும்பினைத்தாமதபூதாதி
தகவுடைத்தாயாவரித்திடுந்தன்மையி
னமைதாவதனைமானஃதாவரித்துச்
சமைதரவதனைமுற்றந்தாவரிக்கு
முறைமையிற்காலமுக்குணத்துடன்முளைத்த
வுறையுளாமாயையொழிவில்வான்பதத்தொடு
மொருபேருருவினொருங்காவரித்த
சுருதியுந்தொடர்தொடர்புடைத்தனிச்சோதியை
யாற்றல்கூர்தமிழ்மறையதனகத்தனவாம்
நூற்றுப்பத்தெனத்தொடர்நோக்குடையவற்றுண்
முந்தியபத்துண்முதற்பத்ததனில்
வந்ததோர்முதலாம்வனப்புடைப்பாட
லோரடியதனகத்தொடுக்கியவென்றியின்
வரியளிமுரல்வகுளாம்புயமாறா
தெரிபவர்தெரிதொறுந்தெவிட்டாவினிமை
யோராயிரத்தினுரனுடைவென்றி
யாராய்பவரிவ்வகலிடத்தெவரே.
(572)

இதுவும் ஞானவீரியமிகுதி. திணையுந் துறையும் இதுவு மது.

குன்றாயிரஞ்சிரமுங்கையுமாயுருக்கொண்டதெனத்
துன்றாடன்மூலபெலப்படைதான்முற்றுஞ்சுற்றியநா
ளொன்றாமுருவமலகில்பல்கோடியுருவெனலாய்ச்
சென்றாடல்கொண்டவன்வின்மையிங்கேதென்றுசெப்புவனே.
(573)

இது சமர்வீரியமிகுதி. அலகில்பல்கோடியுருவம் - எண்ணிறந்த பலகோடியுருவம். துன்றுதல் - நெருங்குதல். சென்றாடல்கொண்டவன் என்பது ஆயிரம்வெள்ளம்படைக்கும் ஆயிரம்வெள்ளம் இராமனென்னும்படி ஓரொருவர்க் கோரொரிராமனென விரைந்தெதிர்முகநின்று சரமாரியைப்பொழிந்து வென்றிகொண்டவ னென்றவாறு. வின்மை - வில்வென்றியினதுதன்மை. இங் கேதென்று செப்புவனே என்பது இவ்