பக்கம் எண் :

494மாறனலங்காரம்

(எ-ன்) திரிபங்கியாமா றுணர்-ற்று.

(இ-ள்) முதலே மிக்கதொருபாவாய்நடந்தவதுதானே பின்னர்க் குறைவுடைத்தாய் மூன்றுபாலா மொழுக்கமுறும்படி பொருளினது தன்மையிற் பகுத்துக்காட்டநிற்பது திரிபங்கியென்பதா மென்றவாறு.

வாரிதிபார்மன்மதன்பூசல்பார்வெய்யமாமதிபா
ரூரலர்பாரன்னையிங்கேசல்பாருய்யுமாறிலைபார்
சோர்குழல்பார்பொன்னிறஞ்சேர்தல்பார்துய்யமான்மயல்பார்
நாரணனேதென்னரங்கேசனேதெய்வநாயகனே.
(802)

இது திரிபங்கி. இதனை மூன்றாகப் பகுத்த பா வருமாறு :-

வாரிதிபார்மன்மதன்பூசல்பார்வெய்யமாமதிபார்
ஊரலர்பார்அன்னையிங்கேசல்பார்உய்யுமாறிலைபார்
சோர்குழல்பார்பொன்னிறஞ்சேர்தல்பாரதுய்யமான்மயல்பார்
நாரணனே. (1) தென்னரங்கேசனே. (2) தெய்வநாயகனே. (3)

எழுகூற்றிருக்கை

297. ஒன்றுமுதலாவோரேழீறாச்
சென்றவெண்ணீரேழ்நிலந்தொறுந்திரிதர
வெண்ணுவதொன்றாமெழுகூற்றிருக்கை.

(எ-ன்) இறுதிநின்ற வெழுகூற்றிருக்கையாமா றுணர்-ற்று.

(இ-ள்) செய்யுளகத்தெண்ணப்பட்ட ஒன்றென்னுமெண்ணொன்றுமுதலாக வோரேழீறாக நிகழ்ந்த வெண்களைப் பதினாலுநிலந்தொறு மீளவெண்ணுவதொன்றாகு மெழுகூற்றிருக்கை யென்றவாறு. செய்யுளகத்தென்பது சொல்லெச்சம்.

(46)

298. அவைதாம்,
இரதபெந்தத்தினிலிடையறையிரண்டாய்ச்
சரதமதுறநடைசார்தருபான்மையி
னொன்றுபன்னான்காயொருபன்னிரண்டாய்
நின்றயலேனவுநிலந்தொறுமுபயங்
குன்றுவதாய்த்தொகைகூடியொன்றிலிறும்.

(எ-ன்) இதுவு மதற் கோர் சிறப்புவிதி கூறுகின்றது.