| ஒற்றர் அஞ்ஞனிடம் சென்று தெரிவித்தல் | | 338. | இருந்த காலையி லென்றுந் தெளிவிலா முரிந்த பாசமன் முன்னோடி யொற்றரே. | (71) | | வேறு | | 339. | முந்து நான்மறை முடியில் வைகிய மூல காரணன் ஞால மீதினில் வந்து தித்தனன் மனித னாவெனும் வார்த்தை யெங்கணும் வார்த்தை யென்னவே. | (72) | | | 340. | இடுக்க ணின்றியிங் கின்று காறுமே இனிது வாழுமற் றென்னை யீசனார் வடுக்கொண் மானிட னாகி வென்றிட வந்து ளாரெனும் வார்த்தை வார்த்தையோ. | (73) | | | | 341. | இல்லை யொன்றுமே யென்னு நீருமின் றிங்கு வேறுள போலி யம்பினீர் சொல்லு மென்னலு மின்று சொல்லுகோம் தொல்லை மாநிலஞ் சொல்லும் வண்ணமே. | (74) | | | | 342. | சமய மோதுவார் தம்மை வம்மெனத் தாமு மங்குள தன்மை கண்டிலம் அமைய வோதுவா ரோது கின்றவா றறிய வோதின மரச வென்னவே. | (75) | | அஞ்ஞன் கூற்று | | 343. | சொன்ன சொல்லினை மெய்ய தென்பவர் சுற்ற முற்றவுஞ் சூறை கொள்ளென மன்ன வன்னிகல் கொண்டு துன்மதி மந்த்ரி தன்னொடு மலைவ தெண்ணவே. | (76) |
340. “இனிதினால் வாழு மென்னை யீசனென் றொருவன் வெல்ல, மனிதனாய் வந்தா னென்னும் வார்த்தையும் வார்த்தை யாமோ” அஞ்ஞவதைப். பி - ம். ‘வந்தனரெனும்’ 341. “ஒன்றில்லை யெனுநீரு மொன்றுண்டு போலே யுரைத்தீர்க ளென வொற்றர்தாம், இன்றில்லை யென்னாதி ரேமிந்த வுலகத்தி னியல்கூறி னேமென்னவே” அஞ்ஞவதைப். 342. தாமுமென்றது சமய மோதுவார்களை. பி - ம். ‘ஓதினமமர்க வென்னவே’ 343. “சொன்னார்கள் சொன்னத்தை மெய்யென் றிருந்தார்கள் சுற்றஞ் சிறைச்செய்கவே” அஞ்ஞவதைப். பி - ம். ‘சொல்வினை மெய்ய தென்பவர்’ ‘மலைவ தென்னவே’ |