பக்கம் எண் :

8. கூளி கூறியது 55

 

வேறு

 
344.

காமன் முதல படைத்தலைவர்
      கலங்கா வயவ ரவரிருப்பச்
சேம மில்லா தவர்போலச்
      செருவுக் கயர்தல் திறனன்றால்.

(77)
   

345.

என்று கூறு மமையத்தின்
      எழுந்து காமன் றன்னுடைய
வென்றி கூற வறிவில்லா
      வேந்தைத் தொழுது விளம்புவனால்.

(78)
 

காமன் கூற்று

346.

செய்ய மேனி செம்பாகம்
      கறுக்க வந்தச் சிவனாரை
எய்த வாளி யிருப்பவுமற்
      றென்னைக் கறுப்பார் வெறுப்பாரே.

(79)
   

347.

கோலி யெய்யு மலர்ப்பகழி
      கூசித் தொடுப்பப் பாலாழி
மாலின் மார்பின் வடுக்கண்டும்
      வருவா ரமர்க்கு வெருவாரே.

(80)
   

348.

பூவி லொன்றும் புண்ணியனார்
      புதல்வி பொம்மன் முலைதோய
ஏவி லொன்றில் வணக்கியநான்
      ஈண்டை மனிதர்க் கெளியேனால்.

(81)
   

349.

பொன்னா டாளும் யானையொரு
      பூனை யாகிப் புறம்போத
அந்நா ளாண்மை செய்தாரும்
      அயலா ரேமற் றியானலனால்.

(82)

346. கறுப்பார் - கோபிப்பார். வெறுப்பாரே  :  ஏகாரம் எதிர்மறை. “பண்டொர் நாண்மலர் பட்டின்று மக்கறைக், கண்டன் மேனிசெம் பாகங் கறுத்ததே” (அஞ்ஞவதைப். ), “விடைவல் லோனும், பாதாதி கேசாந்தம் பாதியுடல் கறுத்து” பிரபோதசந்த்ரோதயம், 26 : 6.

347. மார்பின் வடுவென்றது திருமகள் இருக்கும் இடத்தைக் குறித்தது. “வேலை ஞாலத் தவரென்னை மீறவோ, மாலின் மார்பின் வடுக்கண்டு வைத்துமே” அஞ்ஞவதைப்.

348. புண்ணியனார் - பிரமதேவர். புதல்வி யென்றது திலோத்தமையை. வணக்கிய - வளைத்த. “விதியு மென்றன் விதியினை வெல்லுமோ, மதிய ழிந்து மகட்கு மயங்குமே” அஞ்ஞவதைப்.