11

1 - திருமுருகாற்றுப்படை

கட்கமழ் நெய்த லூதி யெற்படக்
75கண்போன் மலர்ந்த காமரு சுனைமல
ரஞ்சிறை வண்டி னரிக்கண மொலிக்குங்
குன்றமர்ந் துறைதலு முரிய னதா அன்று

திருச்சீரலைவாய்

வைந்நுதி பொருத வடுவாழ் வரிநுதல்
வாடா மாலை யோடையொடு துயல்வரப்
80படுமணி யிரட்டு மருங்கிற் கடுநடைக்
கூற்றத் தன்ன மாற்றரு மொய்ம்பிற்

நகரோடு திசைசுட்டிக் குன்றத்தைக் குறித்தல் : "கறங்கிசை விழவி னுறந்தைக் குணாது, நெடும்பெருங் குன்றத்து(அகநா. 4 : 14-5)

75. கண்போ னெய்தல் ;கழிசேர் மருங்கிற் கணைக்கா னீடிக், கண்போற் பூத்தமைகண்டு நுண்பல, சிறுபா சடைய நெய்தல் குறுமோ"(நற். 8 : 8, 27 : 9-12); "பாசடை நிவந்த கணைக்கா னெய்தல் ......... கயமூழ்கு மகளிர் கண்ணின் மானும்"(குறுந். 9 : 4-6); "கண்போ னெய்தல்" (ஐங். 151 : 3); "மால்வரை மலிசுனை மலரேய்க்கு மென்பதோ ........... பல்லிதழ் மலருண்கன்"(கலித். 45 : 9-11); "நீடிதழ் தலைஇய கவின்பெறு நீலம், கண்ணென மலர்ந்த சுனையும்", "இருங்கழி மலர்ந்த கண்போ னெய்தல்"(அகநா. 38 : 10-11, 170 : 4); "கண்ணவிழ் நெய்தலும்" (சிலப். 14 : 77); "கண்ணின் மலரக் கருநீலம்", "குறுஞ்சுனை மலர்ந்தன தடம்பெருங் கண்ணே"(பு. வெ. 205, 290)

76. அஞ்சிறை வண்டி னரியின மொய்ப்ப"(ஐங். 489)

73 - 6. "முட்டாள சுடர்த்தாமரை, கட்கமழு நறுநெய்தல், வள்ளிதழவிழ் நீலம் ........... வண்டிறை கொண்ட கமழ்பூம்பொய்கை"(மதுரைக். 249-53)

77. "குன்றமர்ந்து"(பரி. 17 : 29)

71 - 7. கூடற்குடவயிற் பரங்குன்று: "சூர்மருங் கறுத்த சுடரிலை நெடுவேற், சினமிகு முருகன் றண்பரங் குன்றத்து" (அகநா. 59 : 10-11); "கொடிநுடங்கு மறுகிற் கூடற் குடாஅது, பல்பொறி மஞ்ஞை வெல்கொடி யுயரிய, ஒடியா விழவி னெடியோன் குன்றத்து, வண்டுபட நீடிய குண்டுசுனை நீலத்து"(அகநா. 149 : 14-7)

80. படுமணியிரட்டு மருங்கு: "படுமணி யிரட்டும் பாவடிப் பணைத்தா, ணெடுநல் யானை", "ஒளிதிக ழோடை பொலிய மருங்கிற், படுமணி யிரட்ட வேறி", "தாடாழ் படுமணி யிரட்டும் பூநுத, லாடியல் யானை"(புறநா. 72 : 3-4, 161 : 18-9, 165 : 6-7)

81. மு. "கூற்றத் தன்ன மாற்றரு முன்பின்"(புறநா. 362 : 7)