132
25தியாணர்க் கோங்கி னவிர்முகை யெள்ளிப்
பூணகத் தொடுங்கிய வெம்முலை முலையென
வண்கோட் பெண்ணை வளர்த்த நுங்கி
னின்சே றிகுதரு மெயிற்றி னெயிறெனக்
குல்லையம் புறவிற் குவிமுகை யவிழ்ந்த
30முல்லை சான்ற கற்பின் மெல்லியன்
மடமா னோக்கின் வாணுதல் விறலியர்
நடைமெலிந் தசைஇய நன்மென் சீறடி
கல்லா விளையர் மெல்லத் தைவரப்
பொன்வார்ந் தன்ன புரியடங்கு நரம்பி
35னின்குரற் சீறியா ழிடவயிற் றழீஇ

25 - 6. "யாணர்க் கோங்கின் குவிமுகை யெள்ளிப், பூணகத் தொடுங்குமுலை"(ஞானாமிர்தம்); "யாணர்க் கோங்கின் மென்முகிழ் முலை" (பாகவதம், 10. கோவியர். 13);முருகு. 34 - 5, ந. குறிப்புரையைப் பார்க்க.

27. இவ்வடி, நுங்கென்பது புல்லொடு வந்ததற்கு மேற்கோள்; (தொல். மரபு. சூ. 86, பேர்.உரை)

28. (பி-ம்.) ‘செறி நீர்தகும்'

19 - 28. "ஈர்ந்து நிலந்தோயும்........எயிற்றின்' என்னும் இச் சந்தானவுவமை மாலையுவமையின்பாற்படும்" (இ-வி. சூ. 645); பாடபேதமுண்டு.

30. "முல்லை சான்ற கற்பின்,மெல்லியற் குறுமகள்" (நற். 142 : 10 - 11); அகநா. 274 : 13 - 4.

"தேவி முல்லை வளர்த்தற்குக் காரணம் கற்புடைமை யென வுணர்க; ‘முல்லை சான்ற கற்பின் மெல்லியல்' இது சிறுபாணாற்றுப்படை"(தக்க. 75)

32. (பி-ம்.) ‘நலமென் சீறடி'

33. "கல்லா மறவர் கணைமாரி"(பு. வெ. 66)

34. "பொன்றிரித் தன்ன நிறத்தன.........நரம்பு" (பெருங். 3. 15 : 53 - 4)

34 - 5. "பொன்வார்ந் தன்ன புரியடங்கு நரம்பின், றொடையமை கேள்வி யிடவயிற் றழீஇ" (பெரும்பாண். 15 - 6);"பொன்வார்ந் தன்ன புரியடங்கு நரம்பின்,மின்னேர் பச்சை மிஞிற்றுக்குரற் சீறியாழ்"(புறநா. 308 : 1 - 2); "நந்தாது பொன் வார்ந்தன யாழினரம்புளர்ந்து" (பாகவதம், 10. கோவர்த்தன. 39)