133
நைவளம் பழுநிய நயந்தெரி பாலை
கைவல் பாண்மகன் கடனறிந் தியக்க
வியங்கா வையத்து வள்ளியோர் நசைஇத்
துனிகூ ரெவ்வமொடு துயராற்றுப் படுப்ப
40முனிவிகந் திருந்த முதுவா யிரவல
கொழுமீன் குறைய வொதுங்கி வள்ளிதழ்க்
கழுநீர் மேய்ந்த கயவா யெருமை
பைங்கறி நிவந்த பலவி னீழன்
மஞ்சண் மெல்லிலை மயிர்ப்புறந் தைவர
45விளையா விளங்க ணாற மெல்குபு பெயராக்
குளவிப் பள்ளிப் பாயல் கொள்ளுங்
குடபுலங் காவலர் மருமா னொன்னார்
வடபுல விமயத்து வாங்குவிற் பொறித்த
வெழுவுறழ் திணிதோ ளியறேர்க் குட்டுவன்
50வருபுனல் வாயில் வஞ்சியும் வறிதே யதா அன்று
நறவுவா யுறைக்கு நாகுமுதிர் நுணவத்
தறைவாய்க் குறுந்துணி யயிலுளி பொருத

36. (பி-ம்.) ‘பழுனிய'

36 - 7. நைவளம் பழுநிய பாலை வல்லோன்" (குறிஞ்சிப். 146)

38 - 9. கூர்ப்பு, முன்சிறவாதுள்ளதொன்று சிறத்தலாகிய குறிப்புணர்த்து மென்பதற்கு மேற்கோள்; தொல். உரி. சூ. 18, சே. சூ. 16, ந.; இ-வி. சூ. .281, உரை.

40. முது வாயொக்கல்", "முதுவாய்க் கோடியர்"(பட்டினப். 214, 253); "நீயும் வம்மோ முதுவாயிரவல; (புறநா. 180 : 9); முருகு.284, ந. குறிப்புரையைப் பார்க்க.

42. நற், 260 : 1.

45. ;நெய்தல், விளையா விளங்க ணாற" (அகநா. 113 : 6, 400 : 21-2)

42 - 7. தடமருப் பெருமை தாமரை முனையின், முடமுதிர் பலவின் கொழுநிழல் வதியுங், குடநாடு" (அகநா. 91 : 15 - 7)

50. (பி-ம்.) ‘புனல் வஞ்சி வாயிலும் வறிதே'

‘வஞ்சியும் வறிதே, மதுரையும் வறிதே, உறந்தையும் வறிதே' என்றாராகலின், இதனைப் பேராச்சிறப்பினையுடைய புகாரென்றார்" (சிலப். பதிகம்: 12 - 20, அடியார்.)

51. நாகு பெண்மையே யன்றி இளமையுமுணர்த்து மென்பதற்கு, ‘நாகுமுதிர் நுணவம்' என்பது மேற்கோள்; சீவக. 74, ந.

நாகுமுதிர் நுணவம்: நாகுமுதிர் நாகத்து; (சிறுபாண். 108)