| னோடாப் பூட்கை யுறந்தையும் வறிதே யதாஅன்று வானம் வாய்த்த வளமலைக் கவாஅற் | 85 | கான மஞ்ஞைக்குக் கலிங்க நல்கிய வருந்திற லணங்கி னாவியர் பெருமகன் பெருங்க னாடன் பேகனுஞ் சுரும்புண நறுவீ யுறைக்கு நாக நெடுவழிச் சிறுவீ முல்லைக்குப் பெருந்தேர் நல்கிய | 90 | பிறங்குவெள் ளருவி வீழுஞ் சாரற் பறம்பிற் கோமான் பாரியுங் கறங்குமணி |
(புறநா. 39 : 5 - 5); "வீங்குதோட் செம்பியன் சீற்றம் விறல்விசும்பிற், றூங்கு மெயிலுந் தொலைத்தலால்" (பழமொழி, 49); "திறல் விளங் கவுணர் தூங்கெயி லெறிந்த, விறன்மிகு முரசின் வெல்போர்ச் சோழன்" (தொல். களவு. சூ. 11, ந. "கண்ணே"); "தேங்கு தூங்கெயி லெறிந்த வவனும்" (கலிங்க. இராச. 17); "கூடார்தம், தூங்கு மெயிலெறிந்த சோழனும்" (விக்கிரம. 8 - 9); "தூங்கெயில் கொண்ட சுடர்வாளோன்" (குலோத். உலா); "வாங்குந் திருக்கொற்ற வாளொன்றின் வாய்வாய்ப்பத், தூங்கும் புரிசை துணித்தகோன்" (இராசராச. 13) 83.ஓடாப்பூட்கை: "ஓடாப் பூட்கைப் பிணிமுகம் வாழ்த்தி" (முருகு. 247) என்பதன் குறிப்புரையைப் பார்க்க.
உறந்தையும் வறிதே : சிலப். பதி. 12-20, அடியார். மேற். 84.மலைக்கவான்:"குறங்கு-மலையடிவாரம்; ‘வானம் வாய்த்த வளமலைக் கவாஅன்' இது சிறுபாணாறு" (தக்க. 540, உரை) 86.ஆவியர் பெருமகன்: "அதுமனெம் பரிசி லாவியர் கோவே" (புறநா. 147 : 9) 84 - 7. "உடாஅ போரா வகுத லறிந்தும், படாஅ மஞ்ஞைக் கீத்த வெங்கோ, கடாஅ யானைக் கலிமான் பேகன்" (புறநா. 141 : 10 - 12) 86 - 7."அருந்திறற் கடவுள் காக்கு முயற்சிமைப், பெருங்க னாடன் பேகனும்" (புறநா. 158 : 11 - 12) 88. (பி-ம்.) ‘நறவுவா யுறைக்கும்' 91. "கொடுக்கிலாதானைப் பாரியேயென்று கூறினுங் கோடுப் பாரிலை" (தே. சுந். புகலூர்) 90 - 91. "நெடுவரைக், கருங்குவெள் ளருவி கல்லைத் தொழுகும், பறம்பிற் கோமான் பாரியும்" (புறநா. 158 : 2 - 4) 89 - 91 "பூத்தலை யறாஅப் புனை கொடி முல்லை, நாத்தழும் பிருப்பப் பாடா தாயினும், கறங்குமணி நெடுந்தேர் கொள்கெனக் கொடுத்த,
|