14

பத்துப்பாட்டு

விண்செலன் மரபி னையர்க் கேந்திய
தொருகை யுக்கஞ் சேர்த்திய தொருகை
நலம்பெறு கலிங்கத்துக் குறங்கின்மிசை யசைஇய தொருகை
10யங்குசங் கடாவ வொருகை யிருகை
யையிரு வட்டமொ டெஃகுவலந் திரிப்ப வொருகை 
மார்பொடு விளங்க வொருகை
தாரொடு பொலிய வொருகை
கீழ்வீழ் தொடியொடு மீமிசைக் கொட்ப வொருகை
115பாடின் படுமணி யிரட்ட வொருகை
நீனிற விசும்பின் மலிதுளி பொழிய வொருகை
வானர மகளிர்க்கு வதுவை சூட்ட
வாங்கப், பன்னிரு கையும் பாற்பட வியற்றி
யந்தரப் பல்லியங் கறங்கத் திண்காழ்

வசிந்து வாங்கென்பது ஆசிரியவுரிச்சீராகிய நிரைபு நேர்புக்கு உதாரணம்; தொல். செய். சூ. 13, பேர். ந

111. ஐயிருவட்டம்: "கையொடு வானிடைச் செல்வ கணிப்பி, லையிரு வட்டம்" (கந்த. சூரபன்மன்வதை. 123)

114. "தொடியணி தோளன்" (முருகு. 211), "கழறொடிச் சேய்" (குறுந். 1 : 3)

115. "பாடின் படுமணி யூடுறுத் திரங்க" (பெருங். 1.38 : 153); "பாடின் படுமணி யார்த்திடும்" (கந்த. திருவிளை. 12)

116. நீனிறவிசும்பு : (பெரும்பாண். 135; மதுரைக். 581: பட்டினப். 67); இருணிற விசும்பில்" (மலைபடு.1)

118. இனைத்தென அறிந்த சினைக்கிளவி வினைகொண்டு முடியுமிடத்து உம்மைபெறு மென்பதற்கு இது மேற்கொள்; தொல். கிளவி. சூ. 33, சே. ந.; பன்னிரு ............. இயற்றி யென்புழியும், தொகுதிப் பெயர் வினையோடு தொடராது கையென்பதனோடு ஒட்டி நிற்றலின், வினைப்படுதொகுதி யன்றாகலான், உம்மைவேண்டா பிறவெனின், அங்ஙனம் ஒட்டி நின்றதாயினும், நான்மறைமுதல்வர், ஐந்தலைநாக மென்பன போலாது, இருசொல்லும் ஒருபொருண்மேல் வருதலிற் கையென்பதனோடு ஒட்டி யியைந்த இயற்றியென்னும் வினை தொகுதிப் பெயரோடும் இயைந்ததாம்; அதனால் அது வினைப்படு தொகுதியாமகலின், உம்மை வேண்டு மென்க" (இ. வி. சூ, 315, உரை)

90-118. கந்தர் கலிவெண்பா, 42-53 கண்ணிகளிற் கூறப்பட்டுள்ள முருகக்கடவுளின் திருமுகங்கள் திருக்கரங்கள் இவற்றின் செயல்கள் பெரும்பாலும் இவ்வாடிகளைத் தழுவியே விளக்கப்பட்டிருக்கின்றன.