144
விருங்கா ழுலக்கை யிரும்புமுகந் தேய்த்த
வவைப்புமா ணரிசி யமலைவெண் சோறு
195கவைத்தா ளலவன் கலவையொடு பெறுகுவி
ரெரிமறிந் தன்ன நாவி னிலங்கெயிற்றுக்
கருமறிக் காதிற் கவையடிப் பேய்மக
ணிணனுண்டு சிரித்த தோற்றம் போலப்
பிணனுகைத்துச் சிவந்த பேருகிர்ப் பணைத்தா
200 ளண்ணல் யானை யருவிதுக ளவிப்ப
நீறடங்கு தெருவினவன் சாறயர் மூதூர்
சேய்த்து மன்று சிறிதுநணி யதுவே
பொருநர்க் காயினும் புலவர்க் காயினு
மருமறை நாவி னந்தணர்க் காயினுங்
205கடவுண் மால்வரை கண்விடுத் தன்ன
வடையா வாயிலவ னருங்கடை குறுகிச்
செய்ந்நன்றி யறிதலுஞ் சிற்றின மின்மையு
மின்முக முடையையு மினிய னாதலுஞ்
செறிந்துவிளங்கு சிறப்பி னறிந்தோ ரேத்த

177 : 3 - 5, 9 : 22 - 3); "மாரிப் பிடிக்கை நால்புறல் கடுப்ப, நீர் பொறையாற்றாது நெகிழ்ந்துவீ ழிசைந்த, காரிருங் கூந்தல்"(பெருங். 1. 40 : 194 - 5); "பிடிக்கைக் கூந்தல்" (சீவக. 2663)

194."அவைப்புமா ணரிசி"(அகநா. 394 : 3)
அமலைவெண்சோறு "அமலைக்கொழுஞ்சோறு"(புறநா. 34 : 14)

196. (பி-ம்.) ‘நாவிலங் கெயிற்று'

197. கவர்வு விருப்பாகு மென்னுஞ் சூத்திரத்தில்,"கவைத்தற் சொற்புறநடையாற் கொள்க" என்பதற்கு இவ்வடி மேற்கோள்; தொல். உரி. சூ. 64 ந.
"கண்டொட் டுண்டு கவையடி பெயர்த்து"(மணி. 6:125)

199 - 200."முடியுடைக் கருந்தலை புரட்டு முன்றா, ளுகிருடையடிய வோங்கெழில் யானை"(பட்டினப 230 - 31)

201."களிறுகா லுதைத்த புஞ்சப் பூழியொடு, மான்றுக ளவிய மதுப்பலி தூவவும்"(பெருங1. 33 : 85 - 6)

203.பொருநர் முதலியோர்க்கு அடையா வாயில்.

206."அடையாத வாயி லகம்"(நள. 65); "விளங்கிய வடையா நெடுங்கடை மருவி" (திருக்காளத்திப். பரத்துவாச. 35)

203 - 6."நசையுநர்த் தடையா நன்பெரு வாயி, லிசையேன் புக்கென் னிடும்பை தீர" (பொருந. 66 - 7)