210 | வஞ்சினர்க் களித்தலும் வெஞ்சின மின்மையு மாணணி புகுதலு மழிபடை தாங்கலும் வாண்மீக் கூற்றத்து வயவ ரேத்தக் கருதியது முடித்தலுங் காமுறப் படுதலு மொருவழிப் படாமையு மோடிய துணர்தலு | 215 | மரியே ருண்க ணரிவைய ரேத்த வறிவுமடம் படுதலு மறிவுநன் குடைமையும் வரிசை யறிதலும் வரையாது கொடுத்தலும் பரிசில் வாழ்க்கைப் பரிசில ரேத்தப் பன்மீ னடுவட் பான்மதி போல | 220 | வின்னகை யாயமோ டிருந்தோற் குறுகிப் பைங்க ணூகம் பாம்புபிடித் தன்ன வங்கோட்டுச் செறிந்த வவிழ்ந்துவீங்கு திவவின் |
212."ஒன்னா ரோட்டிய செருப்புகன் மறவர், வாள்வலம் புணர்ந்தநின் றாள்வலம் வாழ்த்த"(மதுரைக். 726-7); "வாளின் வாழ் நர் தாள்வலம் வாழ்த்த"(புறநா. 24 : 29); "வாய்வாண் மறவரும் வாள்வல னேத்த" (சிலப். 26 : 77) 214.(பி-ம்)‘ஊடிய துணர்தலும்' "சூட்டியன் றேநிற்ப தோடிய வாறிவ ளுள்ளம்"(திருச்சிற். 284) ‘ஓடுதல்-கெடுதல்' என்பதற்கு இது மேற்கோள்;சீவக. 2381. 216.(பி-ம்) ‘ அறிமடம்' 217.வரிசையறிதல்: "பரிசின் மாக்கட்கு வரிசையி னல்கி", "பரிசின் மாக்கள், வரிசை யறிதலோ வரிதே பெரிது, மீத லெளிதே"(புறநா. 6 : 16. 121 : 2 - 4); "வேந்தன் வரிசையா நோக்கி, னது நோக்கி வாழ்வார் பலர்"(குறள், 528) 207 - 18.தகுதியுள்ளவர்களால் ஏத்தப்படுதல். 219."பன்மீ னாப்பட் டிங்கள் போலவும்", "மாரி வானத்து மீனாப்பண், விரிகதிர வெண்டிங்களின்"(புறநா. 13 : 6, 396 : 26 - 7); "மன்ன ராதிபன் றாரகா கணத்திடை மதியெனப் புறப்பட்டான்"(வி. பா. சூதுபோர் .88) 220.இன்னகையாயம்: "நகையம ராய நடுங்க நடுங்கா"(பு. வெ. 75); பொருந. 85, ந. குறிப்புரையைப் பார்க்க. 219 - 20."பன்மீ னடுவட் டிங்கள் போலவும், பூத்த சுற்றமொடு பொலிந்து"(மதுரைக். 769-70); "பன்மீ னாப்பட் டிங்கள் போலப், பூத்த சுற்றமொடு பொலிந்து தோன்றலை"(பதிற். 90 : 17 - 8); "விசும்பிற் கோண்மின்னு மீன்சூழ் குளிர்மாமதித் தோற்ற மொத்தே"(சீவக. 882, ந. மேற்.) 222. கோடு: "மகர யாழின் வான்கோடு தழீஇ" (மணி. 4:56)
|