| காவெரி யூட்டிய கவர்கணைத் தூணிப் பூவிரி கச்சைப் புகழோன் றன்முன் | 240 | பனிவரை மார்பன் பயந்த நுண்பொருட் பனுவலின் வழாஅப் பல்வே றடிசில் வாணிற விசும்பிற் கோண்மீன் சூழ்ந்த விளங்கதிர் ஞாயி றெள்ளுந் தோற்றத்து விளங்குபொற் கலத்தில் விரும்புவன பேணி | 245 | யானா விருப்பிற் றானின் றூட்டித் திறல்சால் வென்றியொடு தெவ்வுப்புல மகற்றி விறல்வேன் மன்னர் மன்னெயின் முருக்கி நயவர் பாணர் புன்கண் டீர்த்தபின் வயவர் தந்த வான்கேழ் நிதியமொடு | 250 | பருவ வானத்துப் பாற்கதிர் பரப்பி |
238 - 9."உரக்குரங் குயர்த்த வொண்சிலை யுரவோன், காவெரி யூட்டிய நாள்"(சிலப். 22 : 111 - 2); "தீவயி றார்த்திய திறலோன் போல" (பெருங். 1. 46 : 91) " ‘காவெரி.......முன்' எனப் பீமசேனற்குப் பெயராயிற்றென்று ணர்க. இது சிறப்புடைத்தான சிறுபாணாற்றுப்படை"(தக்க. 10, உரை) 240."பொன்வரை யன்ன பொருவி லாகத்து" (பெருங். 2. 10 : 5) 238 - 41."ஐவரு ளொருவ னன்ன வடிசினூன் மடையன்"(சீவக. 2735); "மடைநூற் செய்தியும்" (மணி. 2 : 22) 243. மு. "இளங்கதிர் ஞாயி றெள்ளுந் தோற்றத்து"(மணி.பதி.1) 244(பி-ம்.)‘விரும்பினன் பேணி' 245.மு. "ஆனா விருப்பிற் றானின் றூட்டி" (பெரும்பாண். 479) 248.குறுந். 342 : 6. 247 - 8."ஒன்னாத் தெவ்வ ருலைவிடத் தொழித்த, விசும்புசெலிவுளியொடு பசும்படை தரீஇ"(பெரும்பாண். 491 - 2); "செய்வினைக் கெதிர்ந்த தெவ்வர் தேஎத்துக், கடற்படை குளிப்ப மண்டி யடர்ப்புகர்ச், சிறுகண் யானை செவ்விதி னேவிப், பாசவற் படப்பை யாரெயில் பலதந், தவ்வெயிற் கொண்ட செய்வுறு நன்கலம், பரிசின் மாக்கட்கு வரிசையி னல்கி" (புறநா. 6 : 11 - 6); "குரிசி லடையாரைக் கொண்டகூட் டெல்லாம், பரிசின் முகந்தன பாண்"(பு. வெ. 51) 250.பாற்கதிர்: "பான்முகந் தன்ன பசுவெண் ணிலவின்" (நற். 196 : 2); "பாலெனப் பரத்தரு நிலவின் மாலை" (அகநா. 259 : 9);
|