16

பத்துப்பாட்டு

திருவாவினன்குடி

சீரை தைஇய வுடுக்கையர் சீரொடு
வலம்புரி புரையும் வானரை முடியினர்
மாசற விமைக்கு முருவினர் மானி
னுரிவை தைஇய வூன்கெடு மார்பி
130னென்பெழுந் தியங்கு மியாக்கையர் நன்பகற்
பலவுடன் கழிந்த வுண்டிய ரிகலொடு
செற்ற நீக்கிய மனத்தின ரியாவதுங்
கற்றோ ரறியா வறிவினர் கற்றோர்க்குத்
தாம்வரம் பாகிய தலைமையர் காமமொடு
135கடுஞ்சினங் கடிந்த காட்சிய ரிடும்பை
யாவது மறியா வியல்பினர் மேவரத்
துனியில் காட்சி முனிவர் முற்புகப்
புகைமுகந் தன்ன மாசி றூவுடை 
முகைவா யவிழ்ந்த தகைசூ ழாகத்துச்
140செவிநேர்பு வைத்த செய்வுறு திவவி
னல்லியாழ் நவின்ற நயனுடை நெஞ்சின்

நெடுவே ணிலைஇய காமர் வியன்றுறை" (புறநா.55-18-9); "சீர் கெழு செந்திலுஞ் செங்கோடும் வெண்குன்று, மேரகமு நீங்கா விறைவன்"(சிலப். குன்றக்.); "நஞ்செந்தின் மேய வள்ளி மணாளற்குத் தாதை கண்டாய்"(தே. மறைக்காடு)

127.புரையென்பது மரபுபற்றி வருமென்பதற்கு இவ்வடி மேற்கோள்; தொல். உவம. சூ. 17, இளம

126-7. முனிவரியல்பு.

128. "மாசற விளங்கிய யாக்கையர்"(மதுரைக். 456)

130. "உயர்நிலைமற் றென்பியக்கங் கண்டும் புறந்தரார்"(நீதி நெறி, 87; சிதம்பரமும்மணிக்கோவை, 2 : 41)

138. "புகைவிரிந் தன்ன பொங்குதுகில்"(புறநா. 398 : 20); "ஆவி யன்ன பூந்துகில்", "ஆவியந்துகி லாரமர்ந் தார்களே". "பாலா ராவிப் பைந்துகில்"(சீவக. 67, 873, 1094); "ஆவி நுண்டுகில் யாப்புறுத் தாயினும் ", "ஆவி நுண்டுகில் யாப்புறுத்து", "ஆவிநுண்டுகிலணி நலம்"(பெருங். 1. 35 : 64, 165; 1.40 : 228); "கரியவன் வெண்டுகில் கவர்தல் காட்டுவான், விரிமலர்ப் பசுந்தொடை வேனின் மன்னவன், பொருகணை முகத்தெழு புகைமு கந்துற, நிரைவளைச் செங்கர நீட்டு வார்சிலர்"(பாகவதம், கோவியரைமணந்த. 55)

140-41. "குரலோர்த்துத் தொடுத்த சுகிர்புரி நரம்பு "(மலைபடு. 23)