17

1 - திருமுருகாற்றுப்படை

மென்மொழி மேவல ரின்னரம் புளர
நோயின் றியன்ற யாக்கையர் மாவி
னவிர் தளிர் புரையு மேனிய ரவிர்தொறும்
145பொன்னுரை கடுக்குந் திதலைய ரின்னகைப்
பருமந் தாங்கிய பணிந்தேந் தல்குன்
மாசின் மகளிரொடு மறுவின்றி விளங்கக்
கடுவொ டொடுங்கிய தூம்புடை வாலெயிற்
றழலென வுயிர்க்கு மஞ்சுவரு கடுந்திறற்
150பாம்புபடப் புடைக்கும் பல்வரிக் கொடுஞ்சிறைப்
புள்ளணி நீள்கொடிச் செல்வனும் வெள்ளேறு
வலவயி னுயரிய பலர்புகழ் திணிதோ
ளுமையமர்ந்து விளங்கு மிமையா முக்கண்
மூவெயின் முருக்கிய முரண்மிகு செல்வனு

143-4. "தேமா மேனிச் சில்வளை யாயம்" (சிறுபாண். 176); நறுவடிப், பைங்கண் மாஅத் தந்தளி ரன்ன, நன்மா மேனி" (குறுந். 331 : 5-7); "கழிகவி னிளமாவின் றளிரன்னாய்" (கலித். 57 : 13); "மாந்தளிரே மாமேனி" (சீவக. 652)

145. பசலைக்குப் பொன்: "பொன்னிற் பசந்து", "பொற்சுணங் கேர்வர மாமுலை" (பாண்டிக்கோவை); "நின்மேனி, பொன்னிற் பசந்து புலம்புவதென்" (கிளவித்தெளிவு)

கடுக்குமென்பது உருவுவமத்தின்கண் வருமென்பதற்கு இவ்வடி மேற்கோள்;தொல், உவம. சூ. 16, இளம். பேர்; இ. வி. சூ. 642, உரை.

148.கடுவொடுங்கிய எயிறு: புறநா. 17 : 38.

151. புள்ளணி நீள்கொடி : "புள்ளணி நீள்கொடி புணர்நிலை தோன்றும்" (சிலப். 11 : 136); "மண்ணுறு திருமணி புரையு மேனி, விண்ணுயர் புட்கொடி விறல்வெய் யோனும்" (புறநா. 56 : 5-6)

150-51. "பூவைப்பூ மேனியான், பாம்புண் பறவைக் கொடி" (பு.வெ. 227)

151-2. வெள்ளேறு வலவயினுயரிய: "ஊர்தி வால்வெள் ளேறே சிறந்த, சீர்கெழு கொடியு மவ்வே றென்ப", "ஏற்று வலனுயரிய" (புறநா. 1 : 3-4; 56 : 1); "அரசப் பெருங்கொடி யொருவலத் துயரி" (பெருங். 3. 19 : 196)

153-4. "உமையொடு புணர்ந்த விமையா நாட்டத்துக், கண்ணணங் கவிரொளிக் கடவுள்" (பெருங். 1.53 : 15-6; 5. 4 : 51-2); "எண்ணார் மும்மதி லெய்த விமையா முக்கண் ............. பிஞ்ஞகனே" (தே.திருக்கள்ளில், 3); "இமையாத முக்கண் மூவரிற் பெற்றவர்" (திருச்சிற். 14)