| காய்சினந் திருகிய கடுந்திறல் வேனிற் பாசிலை யொழித்த பராஅரைப் பாதிரி | 5 | வள்ளிதழ் மாமலர் வயிற்றிடை வகுத்தத னுள்ளகம் புரையு மூட்டுறு பச்சைப் பரியரைக் கமுகின் பாளையம் பசும்பூக் கருவிருந் தன்ன கண்கூடு செறிதுளை யுருக்கி யன்ன பொருத்துறு போர்வைச் | 10 | சுனைவறந் தன்ன விருடூங்கு வறுவாய்ப் பிறைபிறந் தன்ன பின்னேந்து கவைக்கடை நெடும்பணைத் திரடோண் மடந்தை முன்கைக் குறுந்தொடி யேய்க்கு மெலிந்துவீங்கு திவவின் மணிவார்ந் தன்ன மாயிரு மருப்பிற் | 15 | பொன்வார்ந் தன்ன புரியடங்கு நரம்பின் றொடையமை கேள்வி யிடவயிற் றழீஇ |
வடிகள் மேற்கோள்; விட்டும்விடாத இலக்கணைக்கு இவ்வடிகள் உதாரணமாகக் காட்டப்படும்;(நன். சூ. 269), இராமாநுச, "உயிருண்ணவும் பருகவும் படுவதன்றாயினும் அவ்வாறு கூறுதல், ‘அகலிரு......பருதி' என்றாற்போல ஓரணி குறித்து நின்றது"(புறநா. 230, விசேடவுரை) 3. காய்சினந்திருகிய: "கடுஞ்சினந்திருகி" (மணி. 22 : 157) 4. (பி-ம்.) ‘ஒழிந்த பராஅரை' 5.(பி-ம்.) ‘வகிர்ந்ததன்' 5-6. (பி-ம்.) ‘வைத்ததனுள்ளம்' 7. (பி-ம்.) ‘பாளையின் பசும்பூ', 'பாளையின் பசுங்காய்' 8. (பி-ம்.) ‘சிறுதுளை' 7 - 8. அன்ன : மெய்யுவமவுருபு, தொல். உவம. சூ. 13. இளம். மேற். 9. "விசியுறு போர்வை" என்பதற்குத் தெரியாமற் போர்த்த போர்வை யெனப் பொருள்கூறி இவ்வடியை மேற்கோள் காட்டினர்: சீவக, 559, ந. 10. வறுவாய்: பொருந. 12. 13. ஏய்க்குமென்பது உவமவுருபு(தொல். உவம. சூ. 17. இளம்,) என்பதற்கும், வினையுவமவுருபு(தொல். உவம, சூ. 12. பேர்,) என்பதற்கும் இவ்வடி மேற்கோள். 12 - 3. பொருந. 14 - 5; மலைபடு. 21. 15 - 6.சிறுபாண். 34 - 5-ஆம் அடிகளின் குறிப்புரையைப் பார்க்க.
|