183
50வாரை வேய்ந்த வறைவாய்ச் சகடம்
வேழங் காவலர் குரம்பை யேய்ப்பக்
கோழி சேக்குங் கூடுடைப் புதவின்
முளையெயிற் றிரும்பிடி முழந்தா ளேய்க்குந்
துளையரைச் சீறுர றூங்கத் தூக்கி
55நாடக மகளி ராடுகளத் தெடுத்த
விசிவீங் கின்னியங் கடுப்பக் கயிறுபிணித்துக்
காடி வைத்த கலனுடை மூக்கின்
மகவுடை மகடூஉப் பகடுபுறந் துரப்பக்
கோட்டிணர் வேம்பி னேட்டிலை மிடைந்த
60படலைக் கண்ணிப் பரேரெறுழ்த் திணிதோண்
முடலை யாக்கை முழுவலி மாக்கள்
சிறுதுளைக் கொடுநுக நெறிபட நிரைத்த
பெருங்கயிற் றொழுகை மருங்கிற் காப்பச்
சில்பத வுணவின் கொள்ளை சாற்றிப்
65 பல்லெருத் துமணர் பதிபோகு நெடுநெறி
யெல்லிடைக் கழியுநர்க் கேம மாக
மலையவுங் கடலவு மாண்பயந் தரூஉ
மரும்பொரு ளருந்துந் திருந்துதொடை நோன்றா
ளடிபுதை யரண மெய்திப் படம்புக்குப்
70 பொருகணை தொலைச்சிய புண்டீர் மார்பின்
விரவுவரிக் கச்சின் வெண்கை யொள்வாள்.

50. (பி-ம்.) ‘வார்வை வேய்ந்த'

மு. "ஆரை வேய்ந்த வறைவாய்ச் சகடத்து" (அகநா. 301 : 7)

52. (பி-ம்.) ‘கூட்டுடை'

le="text-indent: 50">53. இரும்பிடி முழந்தாள்; "முழந்தா ளிரும்பிடி" (குறுந். 394 : 1)

60. படலைக்கண்ணி: பெரும்பாண். 174; "முறிமிடை படலை மாலை" (சீவக. 1889; சூளா, துறவு. 23); "இலைபுனைந்த கள்ளவிழ் கண்ணி". "இலைப்பொலிதார்", "முறிமலர்த்தார்" (பு. வெ. 6, 74, 136)

60 - 61. மு. நெடுநல். 31 - 2.

63 - 5, ஒழுகையும் உமணரும்: சிறுபாண். 55.

69. படம் புகுதல்: "படம்புகு மிலேச்சர்" (முல்லை. 66)

70. "பொருகணை தழிச்சிய புண்டீர் மார்பின்" (தொல். புறத். சூ. 8. ந. மேற்.) என்று ஓரடி காணப்படுகிறது.