184
வரையூர் பாம்பிற் பூண்டுபுடை தூங்கச்
சுரிகை நுழைந்த சுற்றுவீங்கு செறிவுடைக்
கருவி லோச்சிய கண்ணக னெறுழ்த்தோட்
73கடம்பமர் நெடுவே ளன்ன மீளி
யுடம்பிடித் தடக்கை யோடா வம்பலர்
தடவுநிலைப் பலவின் முழுமுதற் கொண்ட
சிறுசுளைப் பெரும்பழங் கடுப்ப மிரியற்
புணர்ப்பொறை தாங்கிய வடுவாழ் நோன்புறத்
80 தணர்ச்செவிக் கழுதைச் சாத்தொடு வழங்கு
முல்குடைப் பெருவழிக் கவலை காக்கும்
வில்லுடை வைப்பின் வியன்காட் டியவி
னீளரை யிலவத் தலங்குசினை பயந்த
பூளையம் பசுங்காய் புடைவிரிந் தன்ன
85வரிப்புற வணிலொடு கருப்பை யாடா
தியாற்றறல் புரையும் வெரிநுடைக் கொழுமடல்
வேற்றலை யன்ன வைந்நுதி நெடுந்தக

73. "சுரிகையும் பூங்கச்சிடைக் கோத்து வாங்கி"(சீவக. 698, மேற்.)

75. கடம்பம் நெடுவேள்:முருகு, 225-ஆம் அடியின் குறிப்புரையைப் பார்க்க.
நெடுகவேள்: "வென்றி நெடுவேள்"(குறுந். 111 : 2) "நெடுவேள் குன்ற மடிவைத் தேறி" (சிலப். 23: 190); முருகு. 211-ஆம் அடியின் குறிப்புரையைப் பார்க்க

75 - 6. உவமையிற் பால் மயங்கியதற்கு இவை மேற்கோள்; தொல். உவம. சூ. 6, பேர்.

78. (பி-ம்.) ‘கடுப்ப நெறியில்' , ‘கடுப்ப நெரியல்'.

80. அணர்ச்செவிக் கழுதை: "அணர்ச்செவிக் கழுதையாயரண்டுத் தோன்றிய"(பாகவதம், 10, அரவின்மேலாடிய. 6)

79 - 80. (பி-ம்.) ‘நோன்புறக் கணர்ச் செவி' உல்கு: "உறுபொருளும்"(குறள், 756)

81. பழ. 60,

83.(பி-ம்.) ‘நீள்வரை'

83 - 5. இலவங்காய் அணிலுக்கு உவமை: "தோன்றுபூ விலவத் தங்கட்டொகையணி லனைய பைங்காய், கான்றமென் பஞ்சி"(சீவக. 1701)

87. "கருவி நுதிகொ ணெறியிலை யீந்து" (கல்.)"பொருப்பு"(மயிலேறு .)