186
வல்லூற் றுவரி தோண்டித் தொல்லை
முரவுவாய்க் குழிசி முரியடுப் பேற்றி
100 வாரா தட்ட வாடூன் புழுக்கல்
வாடாத் தும்பை வயவர் பெருமக
னோடாத் தானை யொண்டொழிற் கழற்காற்
செவ்வரை நாடன் சென்னிய மெனினே
தெய்வ மடையிற் றேக்கிலைக் குவைஇநும்
105பைதீர் கடும்பொடு பதமிகப் பெறுகுவிர்
மானடி பொறித்த மயங்கதர் மருங்கின்
வான்மடி பொழுதி னீர்நசைஇக் குழித்த
வகழ்சூழ் பயம்பி னகத்தொளித் தொடுங்கிப் 
புகழா வாகைப் பூவி னன்ன
110வளைமருப் பேனம் வரவுபார்த் திருக்கு
மரைநாள் வேட்ட மழுங்கிற் பகனாட்

100. (பி-ம்.) ‘ஆறாதட்ட'. 'வாறாதட்ட'

102. (பி-ம்.) ‘ஒண்பொறிக்'ஓடாத்தானை: "ஓடாத யானை யுருமுக்குர லோடை யானை" (சீவக. 7.); "ஓடாத தானை, நளனென் றுளனொருவன்" (நள. சுயம்வர. 18)

104. (பி-ம்.) ‘மடைவயிற்' இலை - மரத்துறுப்பினைச் சொல்லும் வாய்பாடு; தொல் மரபு. சூ. 87. பேர். மேற்

104. தேக்கிலையிலுண்ணுதல். அகநா, 107 : 10, 311 : 11,

103 - 5. "மான விறல்வேள் வயிரிய மெனினே, நும்மில் போல நில்லாது புக்குக், கிழவிர் போலக் கேளாது கெழீஇச், சேட்புலம் பகல வினிய கூறிப், பரூஉக்குறை பொழிந்த நெய்க்கண் வேவையொடு, குரூஉக்க ணிறடிப் பொம்மல் பெறுகுவிர்"(மலைபடு. 164 - 9)

107. (பி-ம்.) ‘வானமடி' என்றும் கொள்ள இடமுண்டு.

110. (பி-ம்.) ‘வளையெயிற்றேன வரவு'

109 - 10. ஏனக்கொம்பிற்கு அகத்திப்பூ: "அப்பன்றியைக் கொன்றருளி அதன் கொம்பைச் செவ்வகத்திப் பூவாகச் சாத்தி யருளின கதை"(தக்க. 630, உரை)

108 - 10. பயம்பினிருந்து ஏன வேட்டையாடுதல்: "சேணோனகழ்ந்த மடிவாய்ப் பயம்பின், வீழ்முகக் கேழ லட்ட பூசல்"(மதுரைக். 294 - 5)