187
பகுவாய் ஞமலியொடு பைம்புத லெருக்கித்
தொகுவாய் வேலித் தொடர்வலை மாட்டி
முள்ளரைத் தாமரைப் புல்லிதழ் புரையு
115நெடுஞ்செவிக் குறுமுயல் போக்கற வளைஇக்
கடுங்கட் கானவர் கடறுகூட் டுண்ணு
மருஞ்சுர மிறந்த வம்பர்ப் பருந்துபட
வொன்னாத் தெவ்வர் நடுங்க வோச்சி
வைந்நுதி மழுங்கிய புலவுவா யெஃகம்
120வடிமணிப் பலகையொடு நிரைஇ முடிநாட்
சாபஞ் சார்த்திய கணைதுஞ்சு வியனக
ரூகம் வேய்ந்த வுயர்நிலை வரைப்பின்
வரைத்தேன் புரையுங் கவைக்கடைப் புதையொடு
கடுந்துடி தூங்குங் கணைக்காற் பந்தர்த்
125 தொடர்நா யாத்த துன்னருங் கடிநகர்
வாழ்முள் வேலிச் சூழ்மிளைப் படப்பைக்
கொடுநுகந் தழீஇய புதவிற் செந்நிலை
நெடுநுதி வயக்கழு நிரைத்த வாயிற்


112. பைம்புதலெருக்கி: "சேணாறு பிடவமொடு பைம்புதலெருக்கி"(முல்லை, 25)

114. முள்ளரைத் தாமரை: சிறுபாண். 183-ஆம் அடியின் குறிப்புரையைப் பார்க்க.

தாமரைப் புல்லிதழ்: "புலிநா வன்ன புல்லிதழ்த் தாமரை"(தண்டி. மேற்.)

117. (பி-ம்.) ‘இறந்த வும்பர்'

119 - 20 எஃகம் பலகையொடு நிரைஇ: "பூந்தலைக் குந்தங் குத்திக் கிடுகுநிரைத்து"(முல்லை. 41); "கிடுகுநிரைத் தெஃகூன்றி" (பட்டினப். 78)

121. (பி-ம்.) ‘சாத்திய'

125. "கடுங்குரற் கதநாய் நெடுந்தொடர் பிணித்துப், பாசந்தின்ற தேங்கா லும்பர், மரையதண் மேய்ந்த மயிர்ப்புன் குரம்பை"திருவாரூர் மும். 13 : 10 - 12)

126. வாழ்முள்வேலி.....படப்பை: "இடுமுள் வேலி யெருப்படு வரைப்பின்"(பெரும்பாண். 154)

128. கழு நிரைத்த வாயில்: எறிவேற் பெருங்கடை", "பல்வேன் முற்றம்". "பொருவேன் முற்றம்"(பெருங். 1. 34 : 39, 35 : 66, 37 : 98)