| பகுவாய் ஞமலியொடு பைம்புத லெருக்கித் தொகுவாய் வேலித் தொடர்வலை மாட்டி முள்ளரைத் தாமரைப் புல்லிதழ் புரையு | 115 | நெடுஞ்செவிக் குறுமுயல் போக்கற வளைஇக் கடுங்கட் கானவர் கடறுகூட் டுண்ணு மருஞ்சுர மிறந்த வம்பர்ப் பருந்துபட வொன்னாத் தெவ்வர் நடுங்க வோச்சி வைந்நுதி மழுங்கிய புலவுவா யெஃகம் | 120 | வடிமணிப் பலகையொடு நிரைஇ முடிநாட் சாபஞ் சார்த்திய கணைதுஞ்சு வியனக ரூகம் வேய்ந்த வுயர்நிலை வரைப்பின் வரைத்தேன் புரையுங் கவைக்கடைப் புதையொடு கடுந்துடி தூங்குங் கணைக்காற் பந்தர்த் | 125 | தொடர்நா யாத்த துன்னருங் கடிநகர் வாழ்முள் வேலிச் சூழ்மிளைப் படப்பைக் கொடுநுகந் தழீஇய புதவிற் செந்நிலை நெடுநுதி வயக்கழு நிரைத்த வாயிற் |
112. பைம்புதலெருக்கி: "சேணாறு பிடவமொடு பைம்புதலெருக்கி"(முல்லை, 25) 114. முள்ளரைத் தாமரை: சிறுபாண். 183-ஆம் அடியின் குறிப்புரையைப் பார்க்க. தாமரைப் புல்லிதழ்: "புலிநா வன்ன புல்லிதழ்த் தாமரை"(தண்டி. மேற்.) 117. (பி-ம்.) ‘இறந்த வும்பர்' 119 - 20 எஃகம் பலகையொடு நிரைஇ: "பூந்தலைக் குந்தங் குத்திக் கிடுகுநிரைத்து"(முல்லை. 41); "கிடுகுநிரைத் தெஃகூன்றி" (பட்டினப். 78) 121. (பி-ம்.) ‘சாத்திய' 125. "கடுங்குரற் கதநாய் நெடுந்தொடர் பிணித்துப், பாசந்தின்ற தேங்கா லும்பர், மரையதண் மேய்ந்த மயிர்ப்புன் குரம்பை"திருவாரூர் மும். 13 : 10 - 12) 126. வாழ்முள்வேலி.....படப்பை: "இடுமுள் வேலி யெருப்படு வரைப்பின்"(பெரும்பாண். 154) 128. கழு நிரைத்த வாயில்: எறிவேற் பெருங்கடை", "பல்வேன் முற்றம்". "பொருவேன் முற்றம்"(பெருங். 1. 34 : 39, 35 : 66, 37 : 98)
|