| கொடுவி லெயினக் குறும்பிற் சேப்பிற் | 130 | களர்வள ரீந்தின் காழ்கண் டன்ன சுவல்விளை நெல்லின் செவ்வவிழ்ச் சொன்றி ஞமலி தந்த மனவுச்சூ லுடும்பின் வரைகால் யாத்தது வயின்றொறும் பெருகுவிர் யானை தாக்கினு மரவுமேற் செலினு | 135 | நீனிற விசும்பின் வல்லேறு சிலைப்பினுஞ் சூன்மகண் மாறா மறம்பூண் வாழ்க்கை வலிக்கூட் டுணவின் வாட்குடிப் பிறந்த புலிப்போத் தன்ன புல்லணற் காளை சென்னா யன்ன கருவிற் சுற்றமொடு | 140 | கேளா மன்னர் கடிபுலம் புக்கு நாளா தந்து நறவுநொடை தொலைச்சி |
129. (பி-ம்.) ‘எயினர் குறும்பிற்' 132. "மனாவனைய மென்சூன் மடவுடும்பு" (சீவக. 278)ஙமலி-திசைச்சொல்; தொல், மொழி. சூ. 31, ந. இ - வி. சூ.27, மேற். 135. நீனிற விசும்பு: முருகு. 116-ஆம் அடியின் குறிப்புரையைப் பார்க்க. 134 - 6. அணங்கும் விலங்கும் பொருளாக அச்சம் பிறத்தல் இயல்பென்பதற்கு இவ்வடி மேற்கோள்; தொல். மெய் . சூ. 8, பேர். 138. (பி-ம்.) ‘அணர்க்காளை' வீரனுக்குப் புலிப்போத்து உவமை: "உறுபுலித் துப்பி னோவியர் பெருமகன்"(சிறுபாண். 122); "புலிக்கணமும்.....போல்வார்", "குயவரி வேங்கை யனைய-வயவர்", "இனவேங்கை யன்ன விகல் வெய்யோர்"(பு. வெ. 25, 58, 63); "வயப்புலிப் போத்தன்னார்" (பெரிய. ஏனாதி. 13) புலிப்போத்து, "பொறிவரி யிரும்புலிப் போத்துநனி வெரீஇ."(பெருங்.1. 54 : 37); "புலிப்போத்துக் கொடி" (தக்க. 4, 8, உரை) புல்லணற்காளை: "மையணற் காளை, " (ஐங். 389 ; புறநா. 83 : 1. பு. வெ. 12) போத்தென்னும் பெயர் இளமைக்கும் ஆண்பாற்கும் முறையேயுரித்து; தொல். மரபு சூ. 24, 41 பேர், மேற். 139. (பி-ம்.) ‘செந்நாய்' 141. (பி-ம்) நாளா: "தாளித் தண்பவர் நாளா மேயும்" (குறுந். 104 : 3)
|