189
யில்லடு கள்ளின் றோப்பி பருகி
மல்லன் மன்றத்து மதவிடை கெண்டி
மடிவாய்த் தண்ணுமை நடு்வட் சிலைப்பச்
145சிலைநவி லெறுழ்த்தோ ளோச்சி வலன்வளையூஉப்
பகன்மகிழ் தூங்குந் தூங்கா விருக்கை
முரண்டலை கழிந்த பின்றை மறிய
குளகரை யாத்த குறுங்காற் குரம்பைச்
செற்றை வாயிற் செறிகழிக் கதவிற்
150கற்றை வேய்ந்த கழித்தலைச் சாம்பி
னதளோன் றுஞ்சுங் காப்பி னுதள
நெடுந்தாம்பு தொடுத்த குறுந்தறி முன்றிற்
கொடுமுகத் துருவையொடு வெள்ளை சேக்கு
மிடுமுள் வேலி யெருப்படு வரைப்பி


கள்விலைக்கு ஆவைத்தரல்: "முருந்தே ரிளநகை காணாய் நின்னையர், கரந்தை யலறக் கவர்ந்த வினநிரைகள், கள்விலை யாட்டி .... முன்றினிறைந்தன"(சிலப். வேட்டுவ. 16); "அறாஅ நிலைச்சாடி யாடுறுதேறன், மறாஅன் மழைத்தடங் கண்ணி-பொறாஅன், கடுங்கண் மறவன் கழல்புனைந்தான் காலை, நெடுங்கடைய நேரார் நிரை", "வெங்கட்கு வீசும் விலையாகும் - செங்கட், செருச்சிலையா மன்னர் செருமுனையிற்சீறி, வரிச்சிலையாற் றந்த வளம்"(பு. வெ. 2, 16)

142. தோப்பி: "தோப்பிக் கள்ளொடு துரூஉப்பலி கொடுக்கும்", "பாப்புக்கடுப் பன்ன தோப்பி"(அகநா. 35 ; 9, 348 ; 7); "துழந்தடு கள்ளின் றோப்பியுண் டயர்ந்து"(மணி, 7 : 71)

143. மதவிடை: இ - வி சூ. 282, மேற்.

(பி-ம்.) ‘விடைதெண்டி'

142 - 3. "நறவுந் தொடுமின் விடையும் வீழ்மின்"(புறநா. 262 : 1); "செங்கண் மழவிடை கெண்டிச் சிலைமறவர், வெங்கண் மகிழ்ந்து விழவயர" (பெரும்பொருள்.)

144. "மடிவாய்த் தண்ணுமை நடுவ ணார்ப்ப"(நற்.130 : 2)
146. (பி-ம்.) ‘முனைதலையிருக்கை'

134 - 46. மறங்கடைக் கூட்டிய துடிநிலை யென்னுமீ புறத்திணைத் துறைக்கு இவை மேற்கோள்; தொல். புறத். சூ. 4, இளம்.

151 - 2. (பி-ம்.) ‘உதணெடுந்தாம்பு'தொல். மரபு. சூ, 47. பேர், மேற்.

154. இடுமுள்வேலி: அகநா. 394 : 8; சிலப். 12 : 10 ; 13 : 42.