190
155னள்ளிருள் விடியற் புள்ளெழப் போகிப்
புலிக்குரன் மத்த மொலிப்ப வாங்கி
யாம்பி வான்முகை யன்ன கூம்புமுகி
ழுறையமை தீந்தயிர் கலக்கி நுரைதெரிந்து
புகர்வாய்க் குழிசி பூஞ்சிமட் டிரீஇ
160நாண்மோர் மாறு நன்மா மேனிச்
சிறுகுழை துயல்வருங் காதிற் பணைத்தோட்
குறுநெறிக் கொண்ட கூந்த லாய்மக
ளளைவிலை யுணவிற் கிளையுட னருத்தி
நெய்விலைக் கட்டிப் பசும்பொன் கொள்ளா
165ளெருமை நல்லான் கருநாகு பெறூஉ
மடிவாய்க் கோவலர் குடிவயிற் சேப்பி
னிருங்கிளை ஞெண்டின் சிறுபார்ப் பன்ன
பசுந்தினை மூரல் பாலொடும் பெறுகுவிர்
தொடுதோன் மரீஇய வடுவாழ் நோனடி


155. "புலரி வியற் புள்ளோர்த்துக் கழிமின்" (மலைபடு. 448)

156. தயிர்கடையும் ஓசைக்குப் புலிமுழக்கு :"கடையலங் குரல வாள்வரி யுழுவை"(அகநா. 277:5); "இடும்புலிக் கிரிந்த கருங்கட் செந்நாகு, நாட்டயிர் கடைகுரல் கேட்டொறும் வெரூஉம்" (தொல். அகத். சூ. 41, ந; நம்பி. சூ. 182, மேற்.); "கடைதயிர்க் குரல வேங்கை"(சீவக. 2717); "தயிர் கடையு மோதை, கொல்புலி முழக்கமென்ன வயின்றொறுங் குழுமும்" (நைடதம், நாட்டுப்.15)

157. (பி-ம்.)‘வான்முகிழ்', ‘கூம்புமுகை'

157 - 8. தயிர்க்கு ஆம்பி: "புனிற்றா, எழுந்த வாம்பிக ளிடறின செறிதயி ரேய்த்த" (கம்ப. கார்காலப். 47); "அளைசித றியபோற் கிடந்தன வாம்பி" (கல்.) "கலியாப்பராரை" (மயிலேறு.)

159. பூங்சுமட்டிரீஇ; பூஞ்சுமட் டிரீஇப் போற்றுவனர் தந்த"(பெருங். 2. 5 : 49) 160. பெரியாழ். 3. : 9

163. அளைவிலையுணவு: "அளைவிலை யுணவி னாய்ச்சியர் தம்மொடும்" (சிலப். 16 : 3)

164. "நெய்விலைப் பசும்பொற் றோடும்"(.சீவக. 488)

165. நாகு: தொல். மரபு. சூ. 26, 62. பேர். மேற்.

166. மடிவாய்க் கோவலர்: "மடிவிடு வீளையர்"(குறிஞ்சிப்.161); "இடையன், மடிவிடு வீளை கடிதுசென் றிசைப்ப"(அகநா . 274 : 8 - 9): "நாத்தலை மடிவிளிக் கூத்தொடு குயிறர"(சீவக. 120); "செந்நா மடிவிளி" (கூர்ம, பிலக்கமுத. 30)