191
170விழுத்தண் டூன்றிய மழுத்தின் வன்கை
யுறிக்கா வூர்ந்த மறுப்படு மயிர்ச்சுவன்
மேம்பா லுரைத்த வோரி யோங்குமிசைக்
கோட்டவுங் கொடியவும் விரைஇக் காட்ட
பல்பூ மிடைந்த படலைக் கண்ணி
171யொன்றம ருடுக்கைக் கூழா ரிடையன்
கன்றமர் நிரையொடு கானத் தல்கி
யந்நு ணர்விர்புகை கமழக் கைம்முயன்று
ஞெலிகோற் கொண்ட பெருவிறன் ஞெகிழிச்
செந்தீத் தோட்ட கருந்துளைக் குழலி
180னின்றீம் பாலை முனையிற் குமிழின்
புழற்கோட்டுத் தொடுத்த மரற்புரி நரம்பின்
வில்யா ழிசைக்கும் விரலெறி குறிஞ்சிப்
பல்காற் பறவை கிளைசெத் தோர்க்கும்
புல்லார் வியன்புலம் போகி முள்ளுடுத்
185தெழுகா டோங்கிய தொழுவுடை வரைப்பிற்
பிடிக்கணத் தன்ன குதிருடை முன்றிற்
களிற்றுத்தாள் புரையுந் திரிமரப் பந்தர்க்
குறுஞ்சாட் டுருளையொடு கலப்பை சார்த்தி
நெடுஞ்சுவர் பறைந்த புகைசூழ் கொட்டிற்
190பருவ வானத்துப் பாமழை கடுப்பக்


170. அகநா. 54 : 10.

171. ‘உறிக்கா வாளரொடு"(சிலப். 15 : 205); பெரியாழ். 3. 1: 5

174. (பி-ம்.) ‘பன்மலரடுக்கிய', ‘பன்மலர்மிடைந்த' படலைக்கண்ணி: பெரும்பாண். 60-ஆம் அடியின் குறிப்புரை பார்க்க.

175. மலைபடு: 417; அகநா. 21 : 22

176. "கன்றம ராயங் கானத் தல்கவும்"(புறநா. 230 : 1)

177. (பி-ம்.) ‘புகை பிறப்ப'

178. ஞெலி யென்பது வினைச்சொல்லென்பதற்கு இவ்வடி மேற்கோள்; கலித். 101, ந.

179. ‘தொட்ட' என்றும் கொள்ள இடமுண்டு.

183. பல்காற் பறவை: "மழலைப் பல்காற் பறவை"(பாகவதம். கோவியரை. 28)

188. (பி-ம்.) ‘சாட்டுருளி', 'சாத்தி'

190.(பி-ம்.) ‘பாய்மழை'