| கவைத்தா ளலவ னளற்றளை சிதையப் பைஞ்சாய் கொன்ற மண்படு மருப்பிற் | 210 | காரேறு பொருத கண்ணகன் செறுவி னுழாஅ நுண்டொளி நிரவிய வினைஞர் முடிநா றழுத்திய நெடுநீர்ச் செறுவிற் களைஞர் தந்த கணைக்கா னெய்தற் கட்கமழ் புதுப்பூ முனையின் முட்சினை | 215 | முகைசூழ் தகட்ட பிறழ்வாய் முள்ளிக் கொடுங்கான் மாமலர் கொய்துகொண் டவண பஞ்சாய்க் கோரை பல்லிற் சவட்டிப் புணர்நார்ப் பெய்த புனைவின் கண்ணி யீருடை யிருந்தலை யாரச்டிப் | 220 | பொன்காண் கட்டளை கடுப்பக் கண்பின் புன்காய்ச் சுண்ணம் புடைத்த மார்பி |
207 - 8. அலவன்தாளுக்கு முறிந்த கொடிறு: "கொடிறு முறித்தன்ன கூன்றா ளலவன்" (கபிலர்சிவ. திருவிரட்டை. 28) 209. (பி-ம்.) 'பஞ்சாய்' 210. தொல். செய். ந. மேற். 211. (பி-ம்.) ‘உழவுநுண்' உழாஅ நுண்டொளி: "உழாஅ நுண்டொளி யுள்புக் கழுந்திய" (சிலப்.10 : 120) 217 - 8. பல்லிற் சவட்டிய நாரினால் மாலை கட்டல்: "பல்லினாற் சுகிர்ந்த நாரிற் பனிமலர் பயிலப் பெய்த, முல்லையங் கண்ணி" (சீவக. 438.); "பல்லினாற் சுகிர்ந்த நாரில்.....போதுகட்டிய குழங்கன் மாலை" (கூர்ம. பிலக்க. 43.) 212 - 9. நற்.90 : மு. 220. (பி-ம்.) ‘சண்பின்' பொன்காண் கட்டளை: "பொன்னின், உரைதிகழ் கட்டளை"(குறுந். 192 : 3 - 4); "வண்பிணி யவிழ்ந்த வெண்கூ தாளத், தலங்கு குலை யலரி தீண்டித் தாதுகப். பொன்னுரை கட்டளை கடுப்ப" (அகநா. 178 : 9 - 11) கண்பு: மதுரைக். 172; "கண்பகத்தின் வாரணமே" (திருஞா. தே. திருத்தோணிபுரம்) 220 - 21. இரட்டைக்கிளவி இரட்டை வழித்தானதற்கு இவ்வடிகளை மேற்கோள் காட்டி, "காண்பின் சுண்ணம் புடைத்த செஞ்சுவட்டினையும் மார்பினையும் பொன்னுரையோடும் கல்லோடும் உவமித்தமையின் இரட்டைக்கிளவி இரட்டை வழித்தாயிற்று" என்றெழுதுவர்"
|