| மனைவா ழளகின் வாட்டொடும் பெறுகுவிர் மழைவிளை யாடுங் கழைவள ரடுக்கத் தணங்குடை யாளி தாக்கலிற் பலவுடன் கணஞ்சால் வேழங் கதழ்வுற் றாஅங் | 260 | கெந்திரஞ் சிலைக்குந் துஞ்சாக் கம்பலை விசய மடூஉம் புகைசூ ழாலைதொறும் கரும்பின் றீஞ்சாறு விரும்பினிர் மிசைமின் வேழ நிரைத்து வெண்கோடு விரைஇத் | 265 | தாழை முடித்துத் தருப்பை வேய்ந்த குறியிறைக் குரம்பைப் பறியுடை முன்றிற் கொடுங்காற் புன்னைக் கோடுதுமித் தியற்றிய பைங்காய் தூங்கும் பாய்மணற் பந்தர்
இளையரு முதியருங் கிளையுடன் றுவன்றிப் புலவுநுனைப் பகழியுஞ் சிலையு பிறழும் | 270 | செவ்வரிக்கயலொடு பச்சிறாப் மானச் மையிருங் குட்டத்து மகவொடு வழங்கிக் கோடை நீடினுங் குறைபட லறியாத் |
256.(பி-ம்.) ‘மனையுறை' மனை வாழளகு:"மனையளகு, வள்ளைக் குறங்கும் வளநாட" (திருவள்ளுவ. 5) அளகு-கோழி: இவ்வடி, தொல். மரபு. சூ.56, பேர். மேற். 257. மழை விளை யாடும் அடுக்கம்: "மழைவிளையாடுங் குன்று" (குறுந். 108:1) 260. எந்திரம்: "கழைக்கரும் பெறிந்து கண்ணுடைக்கு மெந்திரம்"(சீவக. 1614) 259-60. "கரும்பி னெந்திரங் களிற்றெதிர் பிளிற்றும்" (ஐங்.55); "இரும்பினன்ன....ஆலையெந் திரங்கள்" (திருவிளை. திருநகர.11) 265. பறி: அகநா. 300:3; நள.3:39. 268. (பி-ம்.) ‘கிளையுடன் குழீஇ' மு. அகநா. 30:4; நற், 207:7. 269. புலவுநுனைப்பகழி: "புலாஅ லம்பிற் போரருங் கடிமிளை" (புறநா. 181:5): "புலவுக்கணை" (பு.வெ.10) 269-70. இறாவுக்குச் சிலை: "இறவுக்கலித்துப், பூட்டறு வல்விலிற் கூட்டுமுதற் றெறிக்கும்" (அகநா.9:1-2); "முடங்கிறவு பூட்டுற்ற வில்லேய்க்கும்"(திணைமாலை.131); "பூட்டுசிலை யிறவினொடு" (சீவக. 1788)
|