196
மனைவா ழளகின் வாட்டொடும் பெறுகுவிர்
மழைவிளை யாடுங் கழைவள ரடுக்கத்
தணங்குடை யாளி தாக்கலிற் பலவுடன்
கணஞ்சால் வேழங் கதழ்வுற் றாஅங்
260கெந்திரஞ் சிலைக்குந் துஞ்சாக் கம்பலை
விசய மடூஉம் புகைசூ ழாலைதொறும்
கரும்பின் றீஞ்சாறு விரும்பினிர் மிசைமின்
வேழ நிரைத்து வெண்கோடு விரைஇத்
265
தாழை முடித்துத் தருப்பை வேய்ந்த
குறியிறைக் குரம்பைப் பறியுடை முன்றிற்
கொடுங்காற் புன்னைக் கோடுதுமித் தியற்றிய
பைங்காய் தூங்கும் பாய்மணற் பந்தர்

இளையரு முதியருங் கிளையுடன் றுவன்றிப்
புலவுநுனைப் பகழியுஞ் சிலையு பிறழும்
270செவ்வரிக்கயலொடு பச்சிறாப் மானச்
மையிருங் குட்டத்து மகவொடு வழங்கிக்
கோடை நீடினுங் குறைபட லறியாத்


256.(பி-ம்.) ‘மனையுறை'

மனை வாழளகு:"மனையளகு, வள்ளைக் குறங்கும் வளநாட" (திருவள்ளுவ. 5)

அளகு-கோழி: இவ்வடி, தொல். மரபு. சூ.56, பேர். மேற்.

257. மழை விளை யாடும் அடுக்கம்: "மழைவிளையாடுங் குன்று" (குறுந். 108:1)

260. எந்திரம்: "கழைக்கரும் பெறிந்து கண்ணுடைக்கு மெந்திரம்"(சீவக. 1614)

259-60. "கரும்பி னெந்திரங் களிற்றெதிர் பிளிற்றும்" (ஐங்.55); "இரும்பினன்ன....ஆலையெந் திரங்கள்" (திருவிளை. திருநகர.11)

265. பறி: அகநா. 300:3; நள.3:39.

268. (பி-ம்.) ‘கிளையுடன் குழீஇ' மு. அகநா. 30:4; நற், 207:7.

269. புலவுநுனைப்பகழி: "புலாஅ லம்பிற் போரருங் கடிமிளை" (புறநா. 181:5): "புலவுக்கணை" (பு.வெ.10)

269-70. இறாவுக்குச் சிலை: "இறவுக்கலித்துப், பூட்டறு வல்விலிற் கூட்டுமுதற் றெறிக்கும்" (அகநா.9:1-2); "முடங்கிறவு பூட்டுற்ற வில்லேய்க்கும்"(திணைமாலை.131); "பூட்டுசிலை யிறவினொடு" (சீவக. 1788)