197
தோடாழ் குளத்த கோடுகாத் திருக்கும்
கொடுமுடி வலைஞர் குடிவயிற் சேப்பின்
275அவையா வரிசி ங்களித் துழவை
மலர்வாய்ப் பிழாவிற் புலர வாற்றிப்
பாம்புறை புற்றிற் குரும்பி யேய்க்கும்
பூம்புற நல்லடை யளைஇத் தேம்பட
எல்லையு மிரவு மிருமுறை கழிப்பி
280
வல்வாய்ச் சாடியின் வழைச்சற விளைந்த
வெந்நீ ரரியல் விரலலை நறும்பிழி
தண்மீன் சூட்டொடு தளர்தலும் பெறுகுவிர்
பச்சூன் பெய்த சுவல்பிணி பைந்தோற்
கோள்வல் பாண்மகன் றலைவலித் தியாத்த
285நெடுங்கழைத் தூண்டி னடுங்கநாண் கொளீஇக்
கொடுவா யிரும்பின் மடிதலை புலம்பப்
பொதியிரை கதுவிய போழ்வாய் வாளை
நீர்நணிப் பிரம்பி னடுங்குநிழல் வெரூஉம்
நீத்துடை நெடுங்கயந் தீப்பட மலர்ந்த
290கடவு ளொண்பூ வடைத லோம்பி
உறைகான் மாறிய வோங்குயர் நனந்தலை


277. புற்றிற் குரும்பி: "புற்றத் தீர்ம்புறத் திறுத்த, குரும்பி" (அகநா. 8:1-2)

280-81. "வழைச்சறு சாடிமட் டயின்று" (சீவக, 1614); "பாளைவிண் டொழுகு வழைச்சறு தேறல்" (இலிங்க. சூரியன் வங்கிச. 11)

284.(பி-ம்.) ‘கொலைவல் பாண்மகன்

286.(பி-ம்.) ‘வடிதலை'

284-7. ஐங்.111; அகநா.216: 1-2

290. "தாமரையை, கடவுள்........ஓம்பி' எனக்கூறுதலானும் அவர் பறியாராயிற்று" (சீவக.51,ந.)

289-90. தாமரைக்கு நெருப்பு: "சுடர்த்தாமரை" (மதுரைக். 249 ; "விளக்கி னன்ன சுடர்விடு தாமரை" (நற். 310:1) சுடர்ப்பூந் தாமரை", "எரியகைந் தன்ன தாமரை" (அகநா. 6:16, 106:1, 116:1) "செறுவிற் பூத்த சேயிதழ்த் தாமரை, அறுதொழி லந்தண ரறம்புரிந் தெடுத்த, தீயொடு விளங்கு நாடன்" (புறநா.397:19-21); "தாமரை யழற்போது" (பெருங். 1. 40:245); "நிரை நெடுங்கய நீரிடை நெருப்பெழுந் தனைய, விரைநெ கிழ்ந்தசெங் கமலமென் பொய்கையின் மேவி" (பெரிய. உருத்திர. 5); பதிற். 19:20.