198
அகலிரு வானத்துக் குறைவி லேய்ப்ப
அரக்கிதழ்க் குவளையொடு நீல நீடி
முரட்பூ மலிந்த முதுநீர்ப் பொய்கைக்
295குறுந ரிட்ட கூம்புவிடு பன்மலர்
பெருநா ளமையத்துப் பிணையினிர் கழிமின்
செழுங்கன் றியாத்த சிறுதாட் பந்தர்ப்
பைஞ்சேறு மெழுகிய படிவ நன்னகர்
மனையுறை கோழியொடு ஞமலி துன்னாது
300வளைவாய்க் கிள்ளை மறைவிளி பயிற்றும்
மறைகாப் பாள ருறைபதிச் சேப்பின்
பெருநல் வானத்து வடவயின் விளங்கும்
சிறுமீன் புரையுங் கற்பி னறுநுதல்
வளைக்கை மகடூஉ வயினறிந் தட்ட
305 சுடர்க்கடைப் பறவைப் பெயர்ப்படு வத்தம்
சேதா நறுமோர் வெண்ணெயின் மாதுளத்
துருப்புறு பசுங்காய்ப் போழொடு கறிகலந்து
கஞ்சக நறுமுறி யளைஇப் பைந்துணர்
நெடுமரக் கொக்கி னறுவடி விதிர்த்த


292-4. பலநிற மலர்களுக்கு இந்திர வில்; "சிலைத்தார்-இந்திரவிற் போலும்மாலை" (புறநா. 10:10,36:12,61:14, உரைகள்); "பொருகடல் வண்ணன் புனைமார்பிற் றார்போற், றிருவில் விலங்கூன்றித் தீம்பெய றாழ, வருதும்" (கார்.1)

298. பைஞ்சேறு: "பைஞ்சேறு மெழுகாப் பசும்பொன் மண்டபம்" (மணி. 19:115)

300. வளைவாய்க் கிள்ளை: "கிள்ளை, வளைவாய்க் கொண்ட வேப்ப வொண்பழம்", "வளைவாய்ச் சிறுகிளி" (குறுந். 67: 1-2, 141:1)

299-301. அந்தணர் தெருவில் கோழியும் நாயும் துன்னாமை: "பார்ப்பாரிற் கோழியும் நாயு புகலின்னா" (இன்னா. 3)

302-4. கற்புக்கு அருந்ததி: "அருந்ததி யனைய கற்பின்" (ஐங்.452); "வடமீன் போற் றொழுதேத்த வயங்கிய கற்பினாள்" (கலித்.2:21);"வடமீன் புரையுங் கற்பின் மடமொழி, யரிவை" (புறநா.122:8-9);"தீதிலா வடமீனின் றிறமிவ டிறமென்று, மாதரார் தொழுதேத்த வயங்கிய பெருங்குணத்துக், காதலாள்", "வடமீன் கற்பின் மனையுறை மகளிர்" (சிலப். 1: 28-9,5:229)

305. (பி-ம்.)‘பெயர்ப்படுபத்தம்'

309. கொக்கின் நறுவடி: "நறுவடிமா" (மலைபடு.512)