199
310தகைமாண் காடியின் வகைபடப் பெறுகுவிர்
வண்ட லாயமொ டுண்டுறைத் தலைஇப்
புனலாடு மகளி ரிட்ட பொலங்குழை
இரைதேர் மணிச்சிர லிரைசெத் தெறிந்தெனப்
புள்ளார் பெண்ணைப் புலம்புமடற் செல்லாது
315கேள்வி யந்தண ரருங்கட னிறுத்த
வேள்வித் தூணத் தசைஇ யவனர்
ஓதிம விளக்கி னுயர்மிசைக் கொண்ட
வைகுறு மீனிற் பைபயத் தோன்றும்
நீர்ப்பெயற் றெல்லைப் போகிப் பாற்கேழ்
320வாலுளைப் புரவியொடு வடவளந் தரூஉம்
நாவாய் சூழ்ந்த நளிநீர்ப் படப்பை
மாட மோங்கிய மணன்மலி மறுகிற்
பரதர் மலிந்த பல்வேறு தெருவில்
சிலதர் காங்குஞ் சே ணுயர் வரைப்பின்
325நெல்லுழு பகட்டொடு கறவை துன்னா
மேழகத் தகரோ டெகினங் கொட்கும்
கூழுடை நல்லிற் கொடும்பூண் மகளிர்
கொன்றை மென்சினைப் பனிதவழ்ல்பவையோற்
பைங்கா ழல்கு னுண்டுகி னுடங்க
330மால்வரைச் சிலம்பின் மகிழ்சிறந் தாலும்
பீலி மஞ்ஞையி னியலிக் கால


312, "புனலாடு மகளி ரிட்ட வொள்ளிழை" (ஐங், 100:1)

313. மணிச்சிரல்: சிறுபாண், 181: மணி.4:24.

315-6. "அந்தி யந்தண ரருங்கட னிறுக்கு, முத்தீ"(புறநா. 2:22-3)

317. சீவக.65.

318. (பி-ம்.) 'பையத்தோன்றும்' பைபய: பெரும்பாண். 334.

319-20, பாற்கேழ்ப்புரவி : "பால் புரை புரவி" (பொருந. 165)

325-6. (பி-ம்.) 'துன்னா தேழகத் தகரோடு'

330-31. மகளிர் நடைக்கு மயில் நடை: "மணிவரைச் சாரல் மஞ்ஞை போல, அணிபெற வியலி யடிக்கல மார்ப்ப" (பெருங்.3.13:50-51); முருகு. 205-ஆம் அடியின் அடிகுறிப்பைப் பார்க்க.