20

பத்துப்பாட்டு

குன்றுதொறாடல்

190பைங்கொடி நறைக்கா யிடையிடுபு வேல
னம்பொதிப் புட்டில் விரைஇக் குளவியொடு
வெண்கூ தாளந் தொடுத்த கண்ணிய
னறுஞ்சாந் தணிந்த கேழ்கிளர் மார்பிற்
கொடுந்தொழில் வல்விற் கொலைஇய கானவர்
195நீடமை விளைந்த தேக்கட் டேறற்
குன்றகச் சிறுகுடிக் கிளையுடன் மகிழ்ந்து
தொண்டகச் சிறுபறைக் குரவை யயர
விரலுளர்ப் பவிழ்ந்த வேறுபடு நறுங்காற்

192. "வெண்கூ தாளத்துத் தண்பூங் கோதையர்" (பட்டினப். 85)

191-2. "குல்லை குளவி கூதளங் குவளை" (நற். 376 : 5); "கூதளங் கவினிய குளவி முன்றில்", "நாறிதழ்க் குளவியொடு கூதளங் குழைய" (புறநா 168 : 12, 380 : 7)

193. "நறுஞ்சாந் தணிந்த கேழ்கிள ரகலம்" (அகநா. 26 : 14)

195. "வேய்ப்பெயல் விளையுட் டேக்கட் டேறல்", "திருந்தமை விளைந்த தேக்கட் டேறல்" (மலைபடு. 171, 522); "தூம்பகம் பழுநிய தீம்பிழி" (பதிற். 18 : 21); "நெடுங்க ணாடமைப் பழுநிக் கடுந்திறற், பாப்புக்கடுப் பன்ன தோப்பி", "அம்பணை விளைந்த தேக்கட் டேறல்" (அகநா. 348 : 6-7, 368 : 14)

194-7. கட்குடித்துக் குரவை யயர்தல்: "அருங்குறும் பெறிந்த கானவ ருவகை, திருந்துவே லண்ணற்கு விருந்திறை சான்மென, நறவுநாட் செய்த குறவர்தம் பெண்டிரொடு, மான்றோற் சிறுபறை கறங்கக் கல்லென. வான்றோய் மீமிசை யயருங் குரவை" (மலைபடு. 318-22); "பெருமலை, வாங்கமைப் பழுநிய நறவுண்டு, வேங்கை முன்றிற் குரவையுங் கண்டே" (நற். 276 : 8-10); "குறியிறைக் குரம்பைக் குறவர் மாக்கள், வாங்கமைப் பழுநிய தேறன் மகிழ்ந்து , வேங்ைகை நீழற் குரவை யயரும்" (புறநா. 129 : 1-3)

196-7. "தொண்டகப் பறைச்சீர் பெண்டிரொடு விரைஇ, மறுகிற் றூங்குஞ் சிறுகுடிப் பாக்கத்து" (அகநா. 118 : 3-4); "தொண்டகந் தொடுமின் சிறுபறை தொடுமின்" (சிலப். 24 : 16)

197-8.பெருங்.1 : 35 : 183.

198-200. "தண்கயத் தமன்ற வொண்பூங் குவளை, யரும்பலைத் தியற்றிய சுரும்பார் கண்ணி, பின்னுப்புறந் தாழக் கென்னே சூட்டி" (அகநா.180 : 5-7); "கூருகிர் விடுத்ததோர் கோல மாலை" (சீவக. 1466)