200
தமனியப் பொற்சிலம் பொலிப்ப வுயர்நிலை
வான்றோய் மாடத்து வரிப்பந் தசைஇக்
கைபுனை குறுந்தொடி தத்தப் பைபய
335முத்த வார்மணற் பொற்கழங் காடும்
பட்டின மருங்கி னசையின் முட்டில்
பைங்கொடி நுடங்கும் பலர்புகு வாயில்
செம்பூத் தூய செதுக்குடை முன்றில்
கள்ளடு மகளிர் வள்ள நுடக்கிய
340வார்ந்துகு சின்னீர் வழிந்த குழம்பின்
ஈர்ஞ்சே றாடிய விரும்பல் குட்டிப்
பன்மயிர்ப் பிணவொடு பாயம் போகாது
நென்மா வல்சி தீற்றிப் பன்னாள்


333. வரிப்பந்து: "வரிப்பந்து கொண்டோடி"( கலித்.51:3); முருகு.68-ஆம் அடியின் குறிப்பைப் பார்க்க.

331-3. "காதுடனே காதுங் கயலிரண்டுஞ் செங்கமலப், போதுடனே நின்று புடைபெயரத்-தாதுடனே, வண்டாடுஞ் சோலை மயில்போல் வரிப்பந்து, கொண்டாட நான்கண்டேன் கொம்பு" (கிளவித் தெளிவு.)

334. (பி-ம்) 'கைப்புனை', 'பைப்பய'

335. முத்த வார்மணல்: "முதிர்வா ரிப்பி மூத்த வார்மணல்"(புறநா.53:1)

பொற்கழங்காடுதல்: "குறுந்தொடி மகளிர், பொலஞ்செய் கழங்கிற் றெற்றி யாடும்" (புறநா.36:3-4); "கைச்செம் பதுமராகக்கழங்கும் பொற்கழங்கும், பச்சை மயிலியலின் பைங்கழங்கும்-மெச்சவெடுத்து"(திருக்காளத்திநாதருலா, 302)

337. கள்விற்போர் கடையிற் கொடிகட்டுதல்: "கள்ளின் களிநவில் கொடியொடு"(மதுரைக்.372); "கட்கொடி நுடங்கு மாவணம் புக்கு" (பதிற்.68:10); நெடுங்கொடி நுடங்கு நறவுமலி மறுகில்" (அகநா. 126:10)

337-8. கள் விற்போர் கடைவாயிலில் கொடிகட்டிப் பூவைத்தூவுதல்: "மணற் குவைஇ மலர்சிதறி, பலர்புகுமனைப் பலிப்புதவி, னறவுநொடைக் கொடியோடு, பிறபிறவு நனிவிரைஇப், பல்வே றுருவிற் பதாகை நீழற், செல்கதிர் நுழையாச் செழுநகர் வரைப்பில்" (பட்டினப்.178-83)

339-40. அகநா. 96:1-2; பெருங்.1, 40: 71-2.

343. "நுறுங்குபெய் தாக்கிய கூழார வுண்டு, பிறங்கிரு கோட்டொடு பன்றியும் வாழும்" (அறநெறிச். 78)