201
குழிநிறுத் தோம்பிய குறுந்தா ளேற்றைக்
345கொழுநிணத் தடியொடு கூர்நறாப் பெறுகுவிர்
வான மூன்றிய மதலை போல
ஏணி சாத்திய வேற்றருஞ் சென்னி
விண்பொர நிவந்த வேயா மாடத்
திரவின் மாட்டிய விலங்குசுடர் ஞெகிழி
350உரவுநீ ரழுவத் தோடுகலங் கரையும்
துறைபிறுக் கொழியப் போகிக் கறையடிக் 
குன்றுறழ் யானை மருங்கு லேய்க்கும்
வண்டோட்டுத் தெங்கின் வாடுமடல் வேய்ந்த
மஞ்சண் முன்றின் மணநாறு படப்பைத்
355தண்டலை யுழவர் தனிமனைச் சேப்பின்
தாழ்கோட் பலவின் சூழ்சுளைப் பெரும்பழம்
வீழி றாழைக் குழவித் தீநீர்க்
கவைமுலை யிரும்பிடிக் கவுண்மருப் பேய்க்குங்
குலைமுதிர் வாழைக் கூனி வெண்பழம்
360திரளரைப் பெண்ணை நுங்கொடு பிறவும்
தீம்பஃறார முனையிற் சேம்பின்
முளைப்புறா முதிர்கிழங் கார்குவிர் பகற்பெயல்
மழைவீழ்ந் தன்ன மாத்தாட் கமுகின்
புடைசூழ் தெங்கின் முப்புடைத் திரள்காய்
365ஆயாறுசெல் வம்பலர் காய்பசி தீரச்
சோறடு குழிசி யிளக விழூஉம்
வீயா யாணர் வளங்கெழு பாக்கத்துப்
பன்மர நீளிடைப் போகி நன்னகர்
விண்டோய் மாடத்து விளங்குசுவ ருடுத்த 


348. "விண்டோய் மாடத்து" (பெரும்பாண். 369)

349-51. "இலங்குநீர் வரைப்பிற் கலங்கரை விளக்கமும்" (சிலப்.6:141)

352. புறநா. 38:1. 42:2

357. குழவி ஓரறிவுயிரின் இளமைப்பெயர்: தொல், மரபு. சூ. 24, பேர். மேற்.

363. "மேகமேய்க்கு மிளங்கமு கம்பொழில்" (தே.பிரமபுரம், "வியங்கயனூர்")