202
370வாடா வள்ளியின் வலம்பல தரூஉம்
நாடுபல கழிந்த பின்றை நீடுகுலைக்
காந்தளஞ் சிலம்பிற் களிறுபடிந் தாங்குப்
பாம்பணைப் பள்ளி யமர்ந்தோ னாங்கண்
வெயினுழை பறியாக் குயினுழை பொதும்பர்க்
375குறுங்காற் காஞ்சி சுற்றிய நெடுங்கொடிப்
பாசிலைக் குருகின் புன்புற வரிப்பூக்
காரகற் கூவியர் பாகொடு பிடித்த
இழைசூழ் வட்டம் பால்கலந் தவைபோல்
நிழறாழ் வார்மண னீர்முகத் துறைப்பப்
380புனல்கால் கழீஇய பொழிறொறுந் திரள்காற்
சோலைக் கமுகின் சூல்வயிற் றன்ன
நீலப் பைங்குடந் தொலைச்சி நாளும்
பெருமகி ழிருக்கை மரீஇச் சிறுகோட்டுக்
குழவித் திங்கட் கோணேர்ந் தாங்குச்
385சுறவுவா யமைத்த சுரும்புசூழ் சுடர்நுதல்
 

370. "வாடா வள்ளியங் காடு" (குறுந். 216:2): "வாடாவள்ளி வயவர்" (தொல். புறத்.சூ.5)

372-3. "பைந்நாகப் பள்ளி மணிவண்ணனிற் பாயல்கொண்டு, கைந்நாகந் துஞ்சுங் கமழ்காந்தளஞ் சாரல் போகி"(சீவக.17)

பாம்பிற்குக் காந்தள்: "திருமணை யுமிழ்ந்த நாகங் காந்தட், கொழுமடற் புதுப்பூ வூதுந் தும்பி, நன்னிற மருளு மருவிடர்"(அகநா.138:17-9)

374. மு.மணி. 4:5 "வெயிலொளி யறியாத விரிமலர்த் தண்காவிற், குயிலாலும்" (கலித்.30: 7-8); "கதிர்நுழை கல்லா மரம் பயில் கடிமிளை (புறநா. 21:5); "வெயில்கண் போழாப் பயில்பூம் பொதும்பு"(பெருங்.1.33:27); "காய்கதிர் நுழையாக் கடிபொழில்" " (பொருளியல்); "வெய்யோன், றானுழை யாவிருளாய்....... காட்டுமொர் கார்பொழிலே" (திருச்சிற். 116)

377. (பி-ம்.) ‘கூவியன்'

"கூவியர்-அப்பவாணிகர்; 'காரகற்......பிடித்த' என்றார். பெரும்பாணாற்றிலும்"(சிலப்.5:24. அடியார்,)

380. "புனல்கால் கழீஇய மணல்வார் புறவு" (மலைபடு. 48)

384-5. சுறவுவாயென்னும் தலையணிக்கு அரவு: "எரிகதிர் மகரவாய் பொறித்த, திலகமே லிடத்துச் செங்கதிர் தொடர்ந்த சேயொளி யரவென நாற்றி" (ஆனைக்காப், அகிலாண்ட.29)