203
நறவுபெயர்த் தமைத்த நல்லெழின் மழைக்கண்
மடவரன் மகளிரொடு பகல்விளை யாடிப்
பெறற்கருந் தொல்சீர்த் துறக்க மேய்க்கும்
பொய்யா மரபிற் பூமலி பெருந்துறைச்
390செவ்விகொள் பவரோ டசைஇ யவ்வயின்
அருந்திறற் கடவுள் வாழ்த்திச் சிறிதுநும்
கருங்கோட் டின்னிய மியல்கினிர் கழிமின்
காழோ ரிகழ்பத நோக்கிக் கீழ
நெடுங்கை யானை நெய்ம்மிதி கவளங்
395கடுஞ்சூன் மந்தி கவருங் காவில்
களிறுகத னடன்கிய வெளிறில் கந்தின்
திண்டேர் குழித்த குண்டுநெடுந் தெருவிற்
படைதொலை பறியா மைந்துமலி பெரும்புகழ்க்
கடைகால் யாத்த பல்குடி கெழீஇக்
400கொடையுங் கோளும் வழங்குநர்த் தடுத்த
அடையா வாயின் மிளைசூழ் படப்பை
நீனிற வுருவி னெடியோன் கொப்பூழ்

390. (பி-ம்.)'கொள்பவரொடும்'

392. இவ்வடி வினைமுற்று வினையெச்சமானதற்கு மேற்கொள்; நன்.சூ.350 மயிலை; நன். வி, சூ.351.

394. (பி-ம்.) 'நெய்மிதி'

"நெல்லுடைக் கவளமொடு நெய்ம்மிதி பெறாஅ" (புறநா.44:2); "நெய்ம்மலி கவளங்கொள்ளா" (சீவக.1076); "நெய்ம்மிதி கவளந் தெவிட்டிநின் றடர்க்கு நிகழ்சுளி தறுகண்மால் யானை" "கைம்முகந்தெடுத்த நெய்ம்மிதி கவளங் களித்தெறி மும்மதக் களிறு" (கூர்ம. சூரியன் மரபு. 8,22)

395. கடுஞ்சூல்: ஐங். 386;சிறுபாண்.148-ஆம் அடிக் குறிப்பைப் பார்க்க.

393-5 மந்தி பிறர் சோர்வுற்றதைஅயறிந்து உணவுப்பொருளைக் கவர்தல்: "மகளிர், இருங்கல் வியலறைச் செந்தினை பரப்பிச், சுனைபாய் சோர்விடை நோக்கிச் சினையிழிந்து, பைங்கண் மந்தி பார்ப்பொடு கவரும்" (குறுந். 335:1-4)

397. "கடுங்தேர் குழித்த ஞெள்ள லாங்கண்" (அகநா. 326. :4. புறநா. 15:1)

402. "நீனிற வுருவி னேமி யோனும்" (புறநா. 58:15); "நீல மேனி நெடியோன்"(சிலப்.5:172)