| நறவுபெயர்த் தமைத்த நல்லெழின் மழைக்கண் மடவரன் மகளிரொடு பகல்விளை யாடிப் பெறற்கருந் தொல்சீர்த் துறக்க மேய்க்கும் பொய்யா மரபிற் பூமலி பெருந்துறைச் | 390 | செவ்விகொள் பவரோ டசைஇ யவ்வயின் அருந்திறற் கடவுள் வாழ்த்திச் சிறிதுநும் கருங்கோட் டின்னிய மியல்கினிர் கழிமின் காழோ ரிகழ்பத நோக்கிக் கீழ நெடுங்கை யானை நெய்ம்மிதி கவளங் | 395 | கடுஞ்சூன் மந்தி கவருங் காவில் களிறுகத னடன்கிய வெளிறில் கந்தின் திண்டேர் குழித்த குண்டுநெடுந் தெருவிற் படைதொலை பறியா மைந்துமலி பெரும்புகழ்க் கடைகால் யாத்த பல்குடி கெழீஇக் | 400 | கொடையுங் கோளும் வழங்குநர்த் தடுத்த அடையா வாயின் மிளைசூழ் படப்பை நீனிற வுருவி னெடியோன் கொப்பூழ் |
390. (பி-ம்.)'கொள்பவரொடும்' 392. இவ்வடி வினைமுற்று வினையெச்சமானதற்கு மேற்கொள்; நன்.சூ.350 மயிலை; நன். வி, சூ.351. 394. (பி-ம்.) 'நெய்மிதி' "நெல்லுடைக் கவளமொடு நெய்ம்மிதி பெறாஅ" (புறநா.44:2); "நெய்ம்மலி கவளங்கொள்ளா" (சீவக.1076); "நெய்ம்மிதி கவளந் தெவிட்டிநின் றடர்க்கு நிகழ்சுளி தறுகண்மால் யானை" "கைம்முகந்தெடுத்த நெய்ம்மிதி கவளங் களித்தெறி மும்மதக் களிறு" (கூர்ம. சூரியன் மரபு. 8,22) 395. கடுஞ்சூல்: ஐங். 386;சிறுபாண்.148-ஆம் அடிக் குறிப்பைப் பார்க்க. 393-5 மந்தி பிறர் சோர்வுற்றதைஅயறிந்து உணவுப்பொருளைக் கவர்தல்: "மகளிர், இருங்கல் வியலறைச் செந்தினை பரப்பிச், சுனைபாய் சோர்விடை நோக்கிச் சினையிழிந்து, பைங்கண் மந்தி பார்ப்பொடு கவரும்" (குறுந். 335:1-4) 397. "கடுங்தேர் குழித்த ஞெள்ள லாங்கண்" (அகநா. 326. :4. புறநா. 15:1) 402. "நீனிற வுருவி னேமி யோனும்" (புறநா. 58:15); "நீல மேனி நெடியோன்"(சிலப்.5:172)
|