420 | கச்சி யோனே கைவண் டோன்றல் நச்சிச் சென்றோர்க் கேம மாகிய அளியுந் தெறலு மெளிய வாகலின் கலைந்தோர் தேஎ மன்றம் பாழ்பட நயந்தோர் தேஎ நன்பொன் பூப்ப | 425 | நட்புக்கொளல் வேண்டி நயந்திசி னோரும் துப்புக்கொளல் வேண்டிய துணையி லோரும் கல்வீ ழருவி கடற்படர்ந் தாங்குப் பல்வேறு வகையிற் பணிந்த மன்னர் இமையவ ருறையுஞ் சிமையச் செவ்வரை | 430 | வெண்டிரை கிழித்த விளங்குசுடர் நெடுங்கோட்டுப் பொன்கொழித் திழிதரும் போக்கருங் கங்கைப் பெருநீர் போகு மிரியன் மாக்கள் ஒருமரப் பாணியிற் றூங்கி யாங்குத் தொய்யா வெறுக்கையொடு துவன்றுபு குழீஇச் | 435 | செவ்வி பார்க்குஞ் செழுநகர் முற்றத்துப் |
398-420. இவ்வடிகளிற் காஞ்சிநகரத்தின் சிறப்புக் கூறப்பட்டது. 421.(பி-ம்.) 'ஏமமாக' 422. (பி-ம்.) 'அளியுந் தெறலுந்தனக் கெளிய' அளியும் தெறலும்: "வலியுந் தெறலு மளியு முடையோய்" (புறநா. 2:8); "குடையையும் வாளையு முடையோ னெனவே அளியுந் தெறலு முடைமை கூறினார்" (சிலப். 19: 19-20, அடியார்.) 423-4. கருத்து: "நீ, உடன்று நோக்கும் வாயெரி தவழ, நீ நயந்து நோக்கும் வாய்பொன் பூப்ப" (புறநா. 38: 5-6) 427. "இருங்கடற் கூங்கிவரும் யாறென" (பரி. 16:27) 429. (பி-ம்.) ‘இமையோர்' மேருமலையில் தேவருறைதல்: "தெய்வத வரையே மேலைத் தேவரா லயமே" (திருவிளை. மேருவைச். 24); "சுரலாயமே மேரு" (சூடாமணி, 5:13) 432. (பி-ம்.) ‘நீர்ப்போகும்' ஒருமரம்: "ஒரு மரத்தோணியும் மேல் கொண்டு" (பு. வெ. 111, உரை) 428-35. மன்னர்.........செவ்வி பார்க்கும் முற்றம்: "கோக்கள் வைகும் முற்றத்தான்" (கம்ப. குகப்.65)
|