206
பெருங்கை யானைக் கொடுந்தொடி படுக்கும்
கருங்கைக் கொல்ல னிரும்புவிசைத் தெறிந்த
கூடத் திண்ணிசை வெரீஇ மாடத்
திறையுறை புறவின் செங்காற் சேவல்
440இன்றுயி லிரியும் பொன்றுஞ்சு வியனகர்க்
குணகடல் வரைப்பின் முந்நீர் நாப்பண்
பகல்செய் மண்டிலம் பாரித் தாங்கு
முறைவேண்டு நர்க்குங் குறைவேண்டு நர்க்கும்
வேண்டுப வேண்டுப வேண்டினர்க் கருளி
445இடைத்தெரிந் துணரு மிருடீர் காட்சிக்
கொடைக்கட னிறுத்த கூம்பா வுள்ளத்
துரும்பில் சுற்றமோ டிருந்தோற் குறுகிப்
பொறிவரிப் புகர்முகந் தாக்கிய வயமான்
கொடுவரிக் குருளை கொளவேட் டாங்குப்
450புலவர் பூண்கட னாற்றிப் பகைவர்
கடிமதி லெறிந்து குடுமி கொள்ளும்
வென்றி யல்லது வினையுடம் படினும்
ஒன்றல் செல்லா வுரவுவாட் டடக்கைக்
கொண்டி யுண்டித் தொண்டையோர் மருக
455மள்ளர் மள்ள மறவர் மறவ


441-2.பொருந. 135-6.

443-5. "முறை வேண்டினார்க்கும் குறை வேண்டினார்க்கும் காண்டற் கெளியனாய்" (குறள், 386, பரிமேல்.) "முறைவேண்டுபொழுதிற் பதனெளியோர்" (புறநா. 35:15)

445. (பி-ம்.) ‘இடைதெரிந்து'

446. "கொடைக்கட னிறுத்த செம்மலோய்" (மலைபடு.543); "கொடைக்கட னிறுக்கு மிக்குவா குப்பெயர்ப் பெரியோன்" (கூர்ம. சூரியன்மரபு.8)

447. (பி-ம்.) ‘உருப்பில்'

"உரும்பில் கூற்றத் தன்ன" (பதிற்.26:13)

இவ்வடியின் பாடபேதம் போற்றோற்றும்' "உருமில் சுற்றம்" என்னும் பகுதியை, உருமென்பது அச்சமென்னும் பொருள் தருதற்கு மேற்கோளாகக் காட்டினர்; தொல். உரி. 67, இளம். சே. ந.

448-9 பொருந. 140-42.

451, "தொல்லிலங்கை குடுமி கொண்டு"(கூர்ம. சுவேத. 5)