| நில்லா வுலகத்து நிலைமை தூக்கி அந்நிலை யணுகல் வேண்டி நின்னரைப் பாசி யன்ன சிதர்வை நீக்கி ஆவி யன்ன வவிர்நூற் கலிங்கம் | 470 | இரும்பே ரொக்கலொ டொருங்குட னுடீஇக் கொடுவாள் கதுவிய வடுவாழ் நோன்கை வல்லோ னட்ட பல்லூன் கொழுங்குறை அரிசெத் துணங்கிய பெருஞ்செந் நெல்லின் தெரிகொ ளரிசித் திரணெடும் புழுக்கல் | 475 | அருங்கடித் தீஞ்சுவை யமுதொடு பிறவும் விருப்புடை மரபிற் கரப்புடை யடிசில் மீன்பூத் தன்ன வான்கலம் பரப்பி மகமுறை மகமுறை நோக்கி முகனமர்ந் தானா விருப்பிற் றானின் றூட்டி | 480 | மங்குல் வானத்துத் திங்க ளேய்க்கும் ஆடுவண் டிமிரா வழலவிர் தாமரை நீடிரும் பித்தை பொலியச் சூட்டி. |
நாவற் பொழிற்கு", பூமலி நாவற் பொழிலகத்து" (பு. வெ. 208,226) 466. (பி-ம்) 'நிலைமை நோக்கி' மு. பொருந. 176. 469. "புகை முகந் தன்ன மாசி றூவுடை" (முருகு. 138) என்பதையும் அதன் அடிக்குறிப்பையும் பார்க்க. 468-70. பொருந. 153 - 7-ஆம், அடிகளையும் அவற்றின் அடிக்குறிப்பையும் பார்க்க. 475. (பி-ம்.) 'அயிரொடு பிறவும்' 477. "கோண்மீ னன்ன பொலங்கலத் தளைஇ"(புறநா. 392:17) 479. மு. சிறுபாண். 245. 478-9. முகனமலர்ந்தூட்டி: "முகனமர்ந்து நல்விருந் தோம்புவான்", "முகத்தா னமர்ந்தினிது நோக்கி" (குறள், 84, 93) 481. (பி-ம்.) ‘அழலிவர்' "ஆடும்வண் டிமிராத் தாமரை" (புறநா. 69:20) 482. (பி-ம்.) ‘பித்திகை'. 'நிவப்பச் சூடி' 481-2. வண்டு இமிரா மாலை: கற்பக மாலை; "ஆடு .... சூடி பாணாறு" (தக்க. 562, உரை)
|