209
பரவுக்கடன் முகந்த பருவ வானத்துப்
பகற்பெயற் றுளியின் மின்னுநிமிர்ந் தாங்குப்
485புனையிருங் கதுப்பகம் பொலியப் பொன்னின்
தொடையமை மாலை விறலியர் மலைய
நூலோர் புகழ்ந்த மாட்சிய மால்கடல்
வளைகண் டன்ன வாலுளைப் புரவி
துணைபுணர் தொழில நால்குடன் பூட்டி
490அரித்தேர் நல்கியு மமையான் செருத்தொலைத்
தொன்னாத் தெவ்வ ருலைவிடத் தொழித்த
விசும்புசெ லிவுளியொடு பசும்படை தரீஇ
அன்றே விடுக்குமவன் பரிசி லின்சீர்க்
கின்னர முரலு மணங்குடைச் சாரல்
495மஞ்ஞை யாலு மரம்பயி லிறும்பில்
கலைபாய்ந் துதிர்த்த மலர்வீழ் புறவில்
மந்தி சீக்கு மாதுஞ்சு முன்றிற்
செந்தீப் பேணிய முனிவர் வெண்கோட்டுக்


483. (பி-ம்.) ‘புலவுக் கடல்)'

486. (பி-ம்.) ‘விறலியர் வேய'

480-86. பாணர் பொற்றாமரையையும் விறலியர் மாலையையும் உபகாரிகளாற் பெறுதல்: பொருந. 159-62-ஆம் அடிகளின் அடிகுறிப்பைப் பார்க்க.

489. நால்கு-நான்கு; "நால்கு பண்ணினர்" (சீவக. 1774)

488-9. பொருந. 165.

490. பரிசிலர்க்குத் தேரைக் கொடுத்தல்: சிறுபாண்,142-3-ஆம் அடிகளின் அடிகுறிப்பைப் பார்க்க.

491. (பி-ம்.) ‘ஒழிந்த'

"ஒன்னாத் தெவ்வ ருலைவிடத் தார்த்து" (பெரும்பாண். 419)

492. (பி-ம்.) ‘விசும்புதோ யிவுளி'

491 -92. சிறுபாண். 247-8-ஆம் அடிகளையும் அவற்றின் அடிகுறிப்பைப் பார்க்க.

494. கின்னரங்கள் பாடுதல்: "பாடு கின்றன. கின்னர மிதுனங்கள் பாராய்" (கம்ப. சித்திரகூட.12); "பாடுவன பூவையோ கின்னரங்கள் பலவுமே"(தக்க.114)

496,பத்துப் - 14 (பி-ம்.) 'மலர்சூழ்'