219

நல்ல பழம் சுளைமிக இராதென்றார்.

78-80. [மிரியல், புணர்ப்பொறை தாங்கிய வடுவாழ் நோன்புறத், தணர்ச்செவிக் கழுதை:]

மிரியல் புணர் பொறை தாங்கிய கழுதை - மிளகினது ஒத்த கனமாகச் சேர்த்த பாரத்தை தாங்கிய கழுதை,

வடு ஆழ் நோன் புறத்து அணர் செவி கழுதை - வடுவழுந்தின வலியினையுடைய முதுகினையும் எடுத்த செவியினையுமுடைய கழுதை,

80-81. கழுதை சாத்தொடு வழங்கும் உல்கு உடை பெரு வழி கவலை காக்கும் - கழுதையிலே மிளகெடுத்துக்கொண்டு போகின்ற திரளோடேவம்பலர்(76) வழங்கும் பெரிய வழியில் கவர்த்த வழிகளையும் காத்திருக்கும்,

உல்கு-சுங்கம்.

82. வில்லுடை வைப்பின் -விற்படையிருக்கின்ற ஊர்களில்,

வியல் காடு இயவின் - அகன்றகாட்டு வழிகளில்,

83-5. நீள் அரை இலவத்து அலங்கு சினை பயந்த பூளை அம்பசு காய் புடை விரிந்தன்ன வரி புற அணிலொடு - நீண்ட தாளினை யுடைய இலவத்தினது அசைகின்ற கொம்பு காய்ந்த பஞ்சினைந்யுடைய அழகினையுடைத்தாகிய பசிய காயினது முதுகு விரிந்து பஞ்சு தோன்றினாலொத்த வரியை முதுகிலேயுடைய அணிலோடே,

85. கருப்பை ஆடாது-எலியும் திரியாதபடி,

86-8. [யாற்றறல் புரையும்வெரிநுடைக் கொழுமடல், வேற்றலை யன்ன வைந்நுதி நெடுந்தக, ஈத்திலை வேய்ந்த வெய்ப்புறக்குரம்பை:]

யாறு அறல் புரையும் வெரிந் கொழுமடல் உடை நெடு தகர் ஈந்து-யாற்றினது அறலையொக்கும் முதுகினையும் கொழுவிய மடலினையுமுடைய நெடிய மேட்டு நிலத்தில் நின்ற ஈந்து,

மடலின் அடி தன்னிடத்தே நிற்க மேல் அறுப்புண்ட ஈந்து அறல் போன்றிருக்குமாறு உணர்க.

வேல் தலை அன்ன வை நுதி ஈந்து இலை வேய்ந்த எய் புறம் குரம்பை - வேலின் முனையை யொத்த கூர்மையினையுடைய முனையினையுடைய ஈந்தினுடைய இலையாலே வேய்ந்த எய்ப்பன்றி முதுகு போலும் (பி-ம். எய்ப்பன்றி போலும்)புறத்தினையுடைய குடிலில்,

89-90. [மான்றோற் பள்ளி மகவொடு முடங்கி, ஈன்பிண வொழியப் போகி:] ஈன் பிணவு மான் தோல் பள்ளி மகவொடு முடங்கி ஒழிய போகி-பிள்ளையைப்பெற்ற எயிற்றி மான்றோலாகிய படுக்கையிலே அப்பிள்ளயோடே முடங்கிக் கிடக்க ஒழிந்தோர் போய்,