22

பத்துப்பாட்டு

செய்யன் சிவந்த வாடையன் செவ்வரைச்
செயலைத் தண்டளிர் துயல்வருங் காதினன்
கச்சினன் கழலினன் செச்சைக் கண்ணியன்
குழலன் கோட்டன் குறும்பல் லியத்தன்
210றகரன் மஞ்ஞையன் புகரில் சேவலங்
கொடிய னெடியன் றொடியணி தோள
னரம்பார்த் தன்ன வின்குரற் றொகுதியொடு

206. "பவழத் தன்ன மேனித் திகழொளிக், குன்றி யேய்க்கு முடுக்கை ............. சேவலங் கொடியோன்" (குறுந். கடவுள். 2-5); "உடையு மொலியலுஞ் செய்யை ........... உருவு முருவத்தீ யொத்தி" (பரி. 19 : 97-9); "குன்றியுங் கோபமு மொன்றிய வுடுக்கை" (தொல். உவம. சூ. 11, பேர். மேற்.); "குன்றி கோபக் கொடிவிடு பவள, மொண்செங் காந்த ளொக்கு நின்னிறம்" (தொல். சொல். இடை. 42, சே. மேற். ); "வென்றிச் செவ்வேள்" (சிலப். 25 : 25)

207. முருகு. 31-ஆம் அடிக்குறிப்பைப் பார்க்க; "ஒண்பூம் பிண்டி யொருகாது செரீஇ" (குறிஞ்சிப். 119)

208. "கச்சினன் கழலினன் றேந்தார் மார்பினன்" (அகநா. 76 : 7)

209. "வல்லானென்னும் வினைக்குறிப்புமுற்று வினையெச்சமாய் நின்றது; என்னை? திருமுருகாற்றுப்படையுள், குழலன் கோட்டன் குறும்பல்லியத்த னென்பதற்குக் குழலை யூதிக் கோட்டைக் குறித்துப் பல்லியத்தை ஒலிப்பித்தென முற்றுவினையை எச்சமாக நச்சினார்க்கினியர் கூறியவுரையிற் கண்டு கொள்க" (தஞ்சை. 8, உரை)

211. நெடியன் : "உருகெழு நெடுவேள்" (முருகு. 273); "கடம் பமர் நெடுவேள்" (பெரும்பாண். 75); "நெடியாய்" (பரி. 19 : 84); "நெடுவேட் பேண", "வெறிகமழ் நெடுவேள்", "நெடுவேண் மார்பினாரம் போல", "காடுகெழு நெடுவேள்" (அகநா. 22 : 6, 98 : 27, 120 : 1,382. 5); "நெடுவே ணிலைஇய காமர் வியன்றுறை" (புறநா. 55 : 19). தொடியணி தோளன்: "கழறொடிச் சேஎய்" (குறுந். 1 : 3)

210-11. "சேவலங் கொடியோன் காப்ப" (குறுந். கடவுள். 5);

"சேவற் கொடியன் தொடியணி தோளன் ........... எனத் தொடர்மொழி யீற்றின் விகுதி பொருந்தியது" (இ. கொ. 117, உரை)

212. "நரம்பின் முரலு நயம்வரு முரற்சி, விறலியர்" (மதுரைக். 217-8); "நரம்புமீ திறவா துடன்புணர்ந் தொன்றிக், கடவ தறிந்த வின்குரல் விறலியர்" (மலைபடு. 535-6); "நரம்பார்த் தன்ன தீங்கிள