107-8. வான் மடி பொழுதில் நீர் நசைஇ குழித்த அகழ்-மழை பெய்தலைத் தவிர்ந்த காலத்தே நீர் நிற்கவேண்டுமென்று நச்சுதலாலே குழித்குதளம், அகழப்படுதலின் அகழென்றது ஆகுபெயர். 108. சூழ் பயம்பின் அகத்து ஒளித்து ஒடுங்கி-அதனைச் சூழப்பறித்துக் கிடக்கின்ற மட்டுக்துகுழிகளினுள்ளே மறைந்ஒதுங்கி, தண்ணீர் குடிக்க வருமென்று குளத்தைச் சூழப் பறித்த குழி, 109-10. புகழா வாகை பூவின் அன்ன வளை மருப்பு ஏனம் வரவு பார்த்து இருக்கும் -அகத்திப்பூவினையொத்த வளைந்த கொம்பினை யுடைய பன்றியினது நீருண்ண வரும் வரவைப் பார்த்திருக்கும், 111. அரை நாள் வேட்டம் அழுங்கின்-நடுவியாமத்து வேட்டைஒழிந்தார்களாயின், பகல் நாள்- அதன் பிற்றை நாளிலே, 112-7. [பகுவாய் ஞமலியொடு பைம்புத லெருக்கித், தொகுவாய் வேலித் தொடர்வலை மாட்டி, முள்ளரைத் தாமரைப் புல்லிதழ் புரையும், நெடுஞ்செவிக் குறுமுயல் போக்கற வளைஇ:] முள் அரை தாமரை புல் இதழ் புரையும் நெடு செவி குறுமுயல் போக்கு அற - முள்ளைத் தண்டிலேயுடைய தாமரையினது புறவிதழை யொக்கும் நெடியசெவியினையுடைய குறிய முயல்களை ஓரிடத்தும் போக்கில்லாதபடி, தொகு வாய் வேலி தொடர் வலை மாட்டி வளைஇ-குவிந்த இடத்தையுடைய வேலியுடத்தேஒன்றோடொன்று பிணைத்த வலைகளை மாட்டி (பி-ம்: மூட்டி) வளைத்து, பகு வாய் ஞமலியொடு பைம்புதல் எருக்கி - அங்காந்த வாயையுடைய நாய்களுடனே சென்று பசிய தூறுகளைஅடித்து அவற்றிற் கிடவாமஓட்டி, 116-7. [கடுங்கட் கானவர் கடறுகூட்டுண்ணும், அருஞ்சுரம்:] கடறு கூட்டுண்ணும் அரு சுரம் -காட்டிலுள்ள முயல்களைக் கொள்ளை கொண்டுண்ணும் அரிய பாலைநிலம், கடுங்கண் கானவர்-தறுகண்மையையுடைய கானவர், கானவர் (116) பயம்பின் ஒடுங்கிப்(108) பார்த்திருக்கும் (110) இராவேட்டம் அழுங்கிற்பகனாளிலே (111) முயலைப் போக்கறவளைத்து (115)எருக்கிக் (112) கூட்டுண்ணும் (116) அருஞ்சுரமென முடிக்க. 117. அரு சுரம் இறந்த அம்பர்(பி-ம்: உம்பர்) குறும்பில் சேப்பின் (129)-இவ்வரிய நிலத்தைக் கைவிட்ட மற்றை நிலத்திற் குறும்பில் தங்கின், குறும்பிற்சேப்பின்(129) என்பதனை இவ்விடத்துக் கூட்டுக.
|