238

குடிவயிற் சேப்பின் (274)பிழியைப் (281) பெறுகுவிரெனமுடிக்க.

283. பசு ஊன் பெய்த சுவல் பிணி பைந்தோல்-செவ்வியான இறைச்சி இட்டுவைத்த தோளிடத்தே கோத்து நாற்றின பசியதோலினையுடைய.

என்றது, தூண்டிலிற் கோக்கும் இரையிட்டு வைக்குந் தோற்பையை.

284. கோள் வல் பாண் மகன்-மீனைத் தப்பாமற் பிடிக்கவல்ல பாண்சாதியிற் பிறந்தவன்.

284-7. [தலைவலித் தியாத்த, நெடுங்கழைத் தூண்டி னடுங்க நாண் கொளீஇக், கொடுவா யிரும்பின் மடிதலை புலம்பப், பொதியிரை கதுவியபோழ்வாய் வாளை:]

நெடு கழை தலை வலித்து யாத்த நாண் தூண்டில் கொளீஇ பொதி இரை-நெடிய மூங்கிற்கோலைத் தலையிலே வலித்துக்கட்டின கயிற்றிடத்தே தூண்டிலைக் கொளுத்தி அதனை மறையப் பொதிந்த இரையை.

கொடு வாய் இரும்பின் மடி தலை புலம்பநடுங்க கதுவிய போழ் வாய் வாளை - வளைந்த வாயினை உடைய தூண்டிலினது மடித்த தலை இரையின்றித் தனிக்கும் படியாகக் கயிறு நடுங்க அவ்விரையைக் கௌவி அகப்படாது போன அங்காந்த வாயை உடைய வாளை மீன்

288-9. நீர் நணி பிரம்பின் நடுங்கு நிழல் வெரூஉம் நீத்து உடை நெடு கயம்-நீர்க்கு அணித்தாய் நின்ற பிரம்பினது காற்றாலசையும் நிழலை நீரிற்கண்டு அஞ்சும் பெருக்கினையுடைய நெடிய குளத்திலே,

289-90. தீ பட மலர்ந்த கடவுள் ஒள் பூ அடைதல் ஓம்பி-நெருப்பின்தன்மை நீரிலேயுண்டாகப்பூத்த கடவுள் சூடுதற்குரிய ஒள்ளிய தாமரைப் பூவைப் பறித்து முடித்தலைப் பரிகரித்து,

291-2. [உறைகான் மாறிய வோங்குயர் நனத்தலை, அகலிருவானத்துக் குறைவி லேய்ப்ப:]

ஓங்கு உறை கால் மாறிய உயர் அகல் இரு வானத்து குறைவில் ஏய்ப்ப-ஓங்குகின்ற துளி கால்விழுதல் தவிர்ந்த உயர்ச்சியையுடைய அகன்ற பெரிய வானத்திடத்துக் குறைவில்லாகிய இந்திரவில்லையொப்ப,

293-4. [அரக்கிதழ்க் குவளையொடுநீல நீட, முரட்பூ மலிந்த முதுநீர்ப் பொய்கை;] அரக்கு இதழ் குவளையொடு நீலம் நீடி முரண்பூ மலிந்த முதுநீர் நன தலை (291)பொய்கை-சாதிலிங்கம் போன்ற இதழையுடைய குவளையோடே நீலப்பூவும் வளர்ந்து ஒன்றற்கொன்று நிறம் மாறுபடுதலையுடைய ஏனைப் பூக்களும் மிக்க முதிய நீரையுடைத்தாகிய அகன்ற இடத்தையுடைய பொய்கைகளிடத்தே,