239

295-6. குறுநர் இட்ட கூம்பு விடு பல் மலர் பெருநாள் அமயத்து பிணையினிர்கழிமின்-பறிப்பார் நுங்களுக்கிட்ட குவிதல் நெகிழ்ந்த பல பூக்களைப் பெரிதாகிய நாட்காலத்த்தே சூடிப்போமின்;

வாளை (287) வெரூஉம் (288) கயத்திலே மலர்ந்த (289) பூவை ஓம்பிக் (290) குறைவிலேய்ப்பப் (292) பூமலிந்த பொய்கைகளிடத்தே (204) குறுநரிட்ட மலரைப் (295) பிணையினிர் கழிமினென முடிக்க.

297. செழு கன்று யாத்த சிறு தாள் பந்தர்-வளவிய கன்றைக் கட்டின சிறிய கால்களையுடைய பந்தரினையும்,

298. [பைஞ்சேறு மெழுகிய படிவ நன்னகர்:]

பைஞ்சேறு மெழுகிய நல் நகர்-ஆப்பியான் மெழுகிய நன்றாகிய அகங்களையும்,

படிவம்-தாம் வழிபடுந்தெய்வங்களையுமுடைய உறைபதி (301) யென்க.

299. மனை உறை கோழியொடு ஞமலி துன்னாது-மனைகளிலே தங்குங் கோழிகளுடனே நாயுஞ்சேராமல்,

300. வளை வாய் கிள்ளை மறைவிளி பயிற்றும் - வளைந்தவாயினையுடைய கிளிக்கு வேதத்தின் ஓசையைக் கற்பிக்கும்,

301. மறை காப்பாளர் உறை பதி சேப்பின்-வேதத்தைக் காத்தற்றொழிலைச் செய்வார் இருக்கின்ற ஊரிடத்தே தங்குவீராயின்,

துன்னாமல் (209)உறையும் பதியென்க.

302. பெரு நல் வானத்து வடவயின் விளங்கும்-பெரிய நன்றாகிய விசும்பிடத்து வடதிசைக்கண்ணே நின்றுவிளங்கும்,

303. சிறுமீன் புரையும் கற்பின்-அருந்ததியையொக்குங் கற்பினையும்,

நறு நுதல்-நறிய நுதலினையுமுடைய,

304. வளை கை மகடூஉ வயின் அறிந்து அட்ட - வளையையுடைய வாகிய கையையுடைய பார்ப்பனி பதமறிந்து அட்டனவற்றை,

என்றது பாற்சோறு பருப்புச்சோறு முதலியவற்றை.

305. சுடர் கடை - ஞாயிறுபட்ட காலத்தே,

பறவை பெயர் படு வத்தம்-பறவையினது பெயரைப்பெறுநெல்லு,

என்றது, இராசான்னமென்னும் பெயர்பெறுகின்ற நெல்லென்றவாறு, ஆகுதி பண்ணுதற்கு இந்தநெல்லுச்சோறே சிறந்ததென்று இதனைக்கூறினார். இனி மின்மினி நெல்லென்பாருமுளர்;இப்பெயர் வழக்கின்மையும் ஆகுதிக்குச்சிறவாமையுமுணர்க.

306-8. [சேதா நறுமோர் வெண்ணெயின் மாதுளத், துருப்புறு பசுங்காய்ப் போழொடு கறிகலந்து, கஞ்சக நறுமுறி யளைஇ :] மாதுளத்து பசு காய் கறி கலந்து கஞ்சகம் நறு முறி அளைஇ சேதா நறு