24

பத்துப்பாட்டு

வேலன் றைஇய வெறியயர் களனுங்
காடுங் காவுங் கவின்பெறு துருத்தியும்
யாறுங் குளனும் வேறுபல் வைப்புஞ்
225சதுக்கமுஞ் சந்தியும் புதுப்பூங் கடம்பு
மன்றமும் பொதியிலுங் கந்துடை நிலையினு
மாண்டலைக் கொடியொடு மண்ணி யமைவர
நெய்யோ டையவி யப்பி யைதுரைத்துக்

222. "சாறயர் களத்து வீறுபெறத் தோன்றி" (முருகு. 283); "வேலன் புனைந்த வெறியயர் களந்தொறும்" (குறுந்.53 : 3); "வேலன் வெறியயர் விளன்களம்" (அகநா. 98 : 18-9); "வெறியயர் வெங்களத்து வேன்மகன்" (நாலடி. இளமை. 6); "வேலனார் வந்து வெறியாடும் வெங்களத்து" (சிலப்.குன்றக்.)

வேலன் ஆடுதல் சிறுபான்மை புறத்திற்குங் கோடற்கு இவ்வடி மேற்கோள்; தொல். புறத். சூ. 5,.

224. "ஆலமுங் கடம்பு நல்யாற்று நடுவும், கால்வழக் கறுநிலைக் குன்றமும் பிறவு, மவ்வவை மேய வேறுவேறு பெயரோய், எவ்வயினோயுநீயே" (பரி. 4 : 67-70); "பெருவேண் மறைந்து பெரும்புனலாடும்" (பெருங். 1,42 : 56). "துறைமிசை-நீர்த்துறையில்; நீர்த்துறையில் நின் திருவடியைச் சூளுறு மவரென்க; யாறுங் குளனுமென்றா ராகலின்" (சிலப். குன்ற.அரும்பத.)

225. கடம்பு முருகக்கடவுளுக்கு இடம்: "கடம்பமர் நெடுவேள்" (பெரும்பாண்.75); "கடம்பமர்ந்து", "கடம்பம ரணிநிலை" (பரி.19 : 2,104); "செல்வக் கடம்பமர்ந்தான்" (ஐந். ஐம். 1); "செவ்வேள் .......... மராஅத்தண் சாயை நின்றணங்கும்" (தஞ்சை. 132);"கடம்பமர் மன்றற் றொங்கற் கந்தனைச் சிந்தை செய்வாம்" (திருவால. கடவுள். 18); "கடம்பமர் காளை" (கந்த. வள்ளியம்மை. 69)

224-5. "துறையு மாலமுந் தொல்வலி மராஅமு, முறையுளி பராஅய்ப் பாய்ந்தனர்" (கலித். 101 : 13-4)

226. மன்றமும் பொதியிலும்: "மாதவ ரிடங்களு மன்றமும் பொதியிலும்" (மணி. 20 : 30); "மன்றும் பொதியிலு மாமயில்சேர்" (தஞ்சை. 34)

225-6. "மன்றமும் பொதியிலுஞ் சந்தியுஞ் சதுக்கமும்" (மணி. 28 : 59; பதிற். 35 : 8, உரை)

228. நெய்யோ டையவி யப்பி: "ஐயவி யப்பிய நெய்யணி நெடு நிலை" (நெடுநல். 86); "நெய்யோ டிமைக்கு மையவித் திரள்காழ்" (நற். 370 : 3); "ஐயவி யப்பிய நெய்யணி முச்சி" (மணி. 3 : 134)