25

1 - திருமுருகாற்றுப்படை

குடந்தம் பட்டுக் கொழுமலர் சிதறி
230முரண்கொ ளுருவி னிரண்டுட னுடீஇச்
செந்நூல் யாத்து வெண்பொரி சிதறி
மதவலி நிலைஇய மாத்தாட் கொழுவிடைக்
குருதியொடு விரைஇய தூவெள் ளரிசி
சில்பலிச் செய்து பல்பிரப் பிரீஇச்
235சிறுபசு மஞ்சளொடு நறுவிரை தெளித்துப்
பெருந்தண் கணவீர நறுந்தண் மாலை
துணையற வறுத்துத் தூங்க நாற்றி
நளிமலைச் சிலம்பி னன்னகர் வாழ்த்தி
நறும்புகை யெடுத்துக் குறிஞ்சி பாடி 
240யிமிழிசை யருவியொ டின்னியங் கறங்க
வுருவப் பல்பூத் தூஉய் வெருவரக்
குருதிச் செந்தினை பரப்பிக் குறமகண்
முருகிய நிறுத்து முரணின ருட்க
முருகாற்றுப் படுத்த வுருகெழு வியனக

229. "குடந்தம் பட்டுச் சூழ்போந்து குழைந்து வழுத்தி " (கூர்ம. தக்கன்வேள்வி. 52)

232. "குருதிச் செந்தினை பரப்பி" (முருகு. 242)

232-3. "மல்லன் மன்றத்து மதவிடை கெண்டி" (பெரும்பாண். 143); "விடையும் வீழ்மின்" (புறநா. 262 : 1)

234. "பொய்வல்பெண்டிர் பிரப்புளர் பிரீஇ" "அறிதல் வேண்டு மெனப் பல்பிரப் பிரீஇ" அகநா. 98 : 9, 242 : 9) "பரந்தெலாப் பிரப்பும் வைத்து" (சீவக. 369); "அவ்வகற் கொண்ட வவியும் பிரப்பும்" (பெருங். 1. 34 : 186)

233-4. "சில்பலி யரிசியும்" (மணி. 6 : 95)

232-4. "பலிகொடுத் துருவச் செந்தினை குருதியொடு தூஉய்" (அகநா. 22 : 9-10); "கொழுவிடைக்கறை விராவிய பலிக்குறை நிரப்பி, வழுவில் பல்பிரப் பிரீஇவெறி யாட்டயர் மன்றத்து" (தணிகை. நாடு. 46)

239. நறும்புகை யெடுத்து: "நறையி னறும்புகை நனியமர்ந்தோயே" (பரி. 14 : 20). மு. "குறிஞ்சிபாடுமி னறும்புகை யெடுமின்" (சிலப். குன்றக்.); "ஐயவி சிந்தி நறைபுகைத் தாய்மலர் தூய்க், கொய்யாக் குறிஞ்சி பலபாடி" (பு. வெ. 79)