பத்துப்பாட்டு 245 | ராடுகளஞ் சிலம்பப் பாடிப் பலவுடன் கோடுவாய் வைத்துக் கொடுமணி யியக்கி யோடாப் பூட்கைப் பிணிமுகம் வாழ்த்தி வேண்டுநர் வேண்டியாங் கெய்தினர் வழிபட வாண்டாண் டுறைதலு மறிந்த வாறே | 250 | யாண்டாண் டாயினு மாக காண்டக முந்துநீ கண்டுழி முகனமர்ந் தேத்திக் |
245. "வெறியயர் வியன்களம் பொலிய வேத்தி" (அகநா. 242 : 11) ஆடுகளம்: "அணங்குறு மகளி ராடுகளங் கடுப்ப" (குறுஞ்சிப்.175); "யானுமோ ராடுகள மகளே" (குறுந். 31 : 14) 236-45. "களநன் கிழைத்துக் கண்ணி சூட்டி, வளநகர் சிலம்பப் பாடிப் பலிகொடுத், துருவச் செந்தினை குருதியொடு தூஉய், முருகாற்றுப் படுத்த வுருகெழு நடுநாள்" (அகநா. 22 : 8-11) 246. "கோடுவாய் வைம்மின் கொடுமணி யியக்குமின்" (சிலப். 24 : 17) 247. ஓடாப் பூட்கை: "ஓடாப் பூட்கை யுறந்தையும் வறிதே" (சிறுபாண். 83) பிணிமுகம்-முருகக்கடவுளின் ஊர்தியாகிய யானை: "சேயுயர் பிணிமுக மூர்ந்து", "பிணிமுக மூர்ந்த வெல்போ ரிறைவ" (பரி. 5 : 2, 17 : 49); "பிணிமுக வூர்தி யொண்செய் யோனும்" (புறநா. 56 : 8); "பிணிமுக மேற்கொண்டு (சிலப். 24. "உரையினி") "பிணிமுக மஞ்ஞை செருமுகத் தேந்திய, மூவிரு திருமுகத் தொருவே லவற்கு" (கல். 7, மயிலேறும்.மேற்.) யானையை வாழ்த்துதல்: "கடம்புங்களிறும் பாடி" (தொல். பொருளியல், சூ. 16, ந. மேற்.) ஓடாப்பூட்கை: நன். சூ. 166, மயிலை. மேற். 246-7. "ததும்புசீ ரின்னியங் கறங்கக் கைதொழு, துருகெழு சிறப்பின் முருகு மனைத்தரீஇக், கடம்புங் களிறும் பாடி" (அகநா. 138 : 9-11) 248. வேண்டுநர் வேண்டியாங் கெய்தல்: "வேண்டிய வேண்டியாங் கெய்தலால்" (குறள்,265); "வேண்டுவார் வேண்டுவதே யீவான் கண்டாய்", "மனத்திருந்த கருத்தறிந்து முடிப்பாய் நீயே" (தே. மறைசை, ஐயாறு) 249. "திசைநாறிய குன்றமர்ந் தாண்டாண்டு" (பரி. 17 : 29); "ஆண்டாண் டுறைகுவர்" (கலித். 36 : 21) 250. (பி-ம்.) ‘ஆங்காங்காயினுமாக' 251. "முகனமர்ந் தின்சொல னாக" (குறள், 92) (பி-ம்.) ‘முக மலர்ந்தேத்தி'
|