264
பெருமுது பெண்டிர் விரிச்சி நிற்பச்
சிறுதாம்பு தொடுத்த பசலைக் கன்றி
னுறுதுய ரலமர னோக்கு யாய்மக
ணடுங்குசுவ லசைத்த கையள் கைய
15கொடுங்கோற் கோவலர் பின்னின் றுய்த்தர
வின்னே வருகுவர் தாய ரென்போ
ணன்னர் நன்மொழி கேட்டன மதனா
னல்ல நல்லோர் வாய்ப்புட் டெவ்வர்
முனைகவர்ந்து கொண்ட திறையர் வினைமுடித்து
20வருத றலைவர் வாய்வது நீநின்
பருவர லெவ்வங் களைமா யோயெனக்

11. பெருமுது பெண்டிர் : குறுந். 181 : 7.

8 - 11. "நென்னீ ரெறிந்து விரிச்சி யோர்க்கும், செம்முது பெண்டின் சொல்லு நிரம்பா" (புறநா. 280 : 6 - 7)

"முல்லை குறிஞ்சியென்பன இடுகுறியோ காரணக்குறியோ வெனின், ஏகதேச காரணம்பற்றி முதலாசிரியர் இட்டதோர் குறியென்றே கொள்ளப்படும். என்னை காரணமெனின், ‘நெல்லொடு .................தூஉய்' என்றமையால் காடுறையுலகிற்கு முல்லைப்பூச் சிறந்த தாகலானும்............இவ்வாறு குறியிட்டாரென்று கொள்ளப்படும் என்க" (தொல். அகத். சூ. 5, இளம்.)

6 - 11. மாலையில் விரிச்சி நிற்றல் : "வேண்டிய பொருளின் விளைவுநன் கறிதற், கீண்டிருண் மாலைச் சொல்லோர்த் தன்று" (பு. வெ. 4)

12. பசலைக்கன்று : "பறித்து மென்றுவா யசைப்பன பசலையான் கன்று" (திருவிளை. திருநகரப். 33)

12 - 4. இவ்வடிகளுடன், "எம்மனை மாரினி" (சீவக. 425) என்னுஞ் செய்யுளை ஒப்பிடுக.

15. கொடுங்கோற் கோவலர் : "கொடுங்கோற், கல்லாக் கோவலர்" (அகநா. 74 : 15 - 6)

16. "இன்னே வருகுவர்" (நெடுநல். 155)

15-6. காதல்பற்றியும் உவப்புப்பற்றியும் அஃறிணை உயர்திணையாய் மயங்கியதற்கு இவ்வடிகள் மேற்கோள் : தொல். கிளவி. சூ. 27, ந. இ - வி. சூ. 299.

20. (பி-ம்.) ‘வருதராதல் வாய்வது' 21. (பி-ம்.) ‘மாயோளென'

20-21. "பொய்ம்மை யுடன்புணரார் மேலவர் பொய்ம்மையு, மெய்ம்மைசூழ் மேலவரை மேவாவாம்-இம்முறையாற், பூவலருந் தாராய்