265
காட்டவுங் காட்டவுங் காணாள்க லுழ்சிறந்து
பூப்போ லுண்கண் புலம்புமுத் துறைப்பக்
கான்யாறு தழீஇய வகனெடும் புறவிற்
25சேணாறு பிடவமொடு பைம்புத லெருக்கி
வேட்டுப்புழை யருப்ப மாட்டிக் காட்ட
விடுமுட் புரிசை யேமுற வளைஇப்
படுநீர்ப் புணரியிற் பரந்த பாடி
யுவலைக் கூரை யொழுகிய தெருவிற்
30கவலை முற்றங் காவ னின்ற
தேம்படு கவுள சிறுகண் யானை
யோங்குநிலைக் கரும்பொடு கதிர்மிடைந் தியாத்த
வயல்விளை யின்குள குண்ணாது நுதறுடைத்

பிரிந்தாற் பொலங்குழையார், காவலர்சொற் போற்றல் கடன்" (இ-வி. சூ. 658, மேற்.) என்பதன் கருத்து இவ்வடிகளின் கருத்தையொத்தது.

20 - 22. "இன்னே வருகுவ ரின்றுணை யோரென, வுகத்தவை மொழியவு மொல்லாண் மிகக்கலுழ்ந்து" (நெடுநல். 155 - 6)

23. பூப்போலுண்கண்: நற். 20 : 6, 325 : 7 ; குறுந். 101 : 4 ; ஐங். 16 : 4, 101 : 4. புலம்புமுத்துறைப்ப : "விலங்கிநிமிர் நெடுங்கண் புலம்புமுத் துறைப்ப" (சிலப், 4 : 71)

25. பைம்புதலெருக்கி : பெரும்பாண். 112.

28. (பி - ம்.) ‘பரந்த பாசறை'

பாசறைக்குக் கடல் : "கண்கூ டிறுத்த கடன்மருள் பாசறை", "கடல்கிளர்ந் தன்ன கட்டூர் நாப்பண்" (புறநா. 294 : 2. 295 : 1)

24 - 8. வஞ்சி, முல்லையின் புறமென்பதற்கு இவ்வடிகள் மேற்கோள் : தொல். புறத். சூ. 6, இளம் ந.

29. ‘உவலை' தழையென்னும் பொருளை யுணர்த்துமென்பதற்கு இவ்வடி மேற்கோள்; தஞ்சை. 363.

29 - 30. "கவலை மறுகிற் கடுங்கண் மறவர், உவலைசெய் கூரையொடுங்க" (பு. வெ. 169)

30 - 31. "எல்லை நின்ற வென்றி யானை யென்ன நின்ற ................. வாயிலே" (கம்ப. நகர. 22)

31 - 3. "கரும்பொடு காய்நெற் றுற்றி........யானை" (சீவக. 2522)

31 - 4. "யானை தன், கோட்டிடை வைத்த கவளம்போல" (புறநா. 101 : 6 - 7)