| தயினுனை மருப்பிற்றங் கையிடைக் கொண்டெனக் | 35 | கவைமுட் கருவியின் வடமொழி பயிற்றிக் கல்லா விளைஞர் கவளங் கைப்பக் கற்றோய்த் துடுத்த படிவப் பார்ப்பான் முக்கோ லசைநிலை கடுப்ப நற்போ ரோடா வல்விற் றூணி நாற்றிக் | 40 | கூடங் குத்திக் கயிறுவாங் கிருக்கைப் பூந்தலைக் குந்தங் குத்திக் கிடுகுநிரைத்து வாங்குவி லரண மரண மாக வேறுபல் பெரும்படை நாப்பண் வேறோர் நெடுங்காழ்க் கண்டங் கோலி யகநேர்பு | 45 | குறுந்தொடி முன்கைக் கூந்தலஞ் சிறுபுறத் திரவுபகற் செய்யுந் திண்பிடி யொள்வாள் விரவுவரிக் கச்சிற் பூண்ட மங்கையர் |
35. "கவைமுட் கருவியு மாகிக் கடிகொள" (மணி. 18 : 164) வடமொழி பயிற்றி : "பெருவெளில் பிணிமார் விரவுமொழி பயிற்றும் பாகர்" (மலைபடு. 326-7) 36. "காழோர் கடுங்களிறு கவளங் கைப்ப" (மதுரைக். 658-9)37-8. "முக்கோலுங் கமண்டலமுஞ் செங்கற் றூசு முந்நூலுஞ் சிகையுமாய் முதிர்ந்து தோன்று, மக்கோலம்" (வி. பா. அருச்சுனன் தீர்த்த. 55) 40. கூடம் : "ஒல்லாக் கூடமு மொருங்குதலைப் பிணங்கி" (பெருங். 2. 12 : 45)41. பெரும்பாண். 119-20 -ஆம் அடிகளின் குறிப்புரைகளைப் பார்க்க. 41 - 2. "வேலி யிட்ட தவர்க ளிட்ட வில்லும் வாளும் வேலுமே" (திருவரங்கக்கலம். 53) 43. பட்டினப். 216. 44. "நெடுங்காழ்க் கண்ட நிரல்பட நிரைத்த, கொடும்பட நெடுமதில்" (சிலப். 27 : 151-2) : "காழொடு சேர்த்த, கண்டப் பூந்திரை மண்டபத் திழைத்த, நன்னகர்", "கண்டப் பூந்திரை காழ்முதற்கொளீஇ", "பல்காழ்த் திரையும்" (பெருங். 1.42 : 105-7, 2.4 : 134. 12 : 44)46-7. "இடும்பறக் கழுவி யெஃகி னிருளற வடிக்கப் பட்ட, வரும்பெறற் சுரிகை யம்பூங் கக்சிடைக் கோத்து வாங்கி" (சீவக. 698)
|