266
தயினுனை மருப்பிற்றங் கையிடைக் கொண்டெனக்
35கவைமுட் கருவியின் வடமொழி பயிற்றிக்
கல்லா விளைஞர் கவளங் கைப்பக்
கற்றோய்த் துடுத்த படிவப் பார்ப்பான்
முக்கோ லசைநிலை கடுப்ப நற்போ
ரோடா வல்விற் றூணி நாற்றிக்
40கூடங் குத்திக் கயிறுவாங் கிருக்கைப்
பூந்தலைக் குந்தங் குத்திக் கிடுகுநிரைத்து
வாங்குவி லரண மரண மாக
வேறுபல் பெரும்படை நாப்பண் வேறோர்
நெடுங்காழ்க் கண்டங் கோலி யகநேர்பு
45குறுந்தொடி முன்கைக் கூந்தலஞ் சிறுபுறத்
திரவுபகற் செய்யுந் திண்பிடி யொள்வாள்
விரவுவரிக் கச்சிற் பூண்ட மங்கையர்

35. "கவைமுட் கருவியு மாகிக் கடிகொள" (மணி. 18 : 164)

வடமொழி பயிற்றி : "பெருவெளில் பிணிமார் விரவுமொழி பயிற்றும் பாகர்" (மலைபடு. 326-7)

36. "காழோர் கடுங்களிறு கவளங் கைப்ப" (மதுரைக். 658-9)

37-8. "முக்கோலுங் கமண்டலமுஞ் செங்கற் றூசு முந்நூலுஞ் சிகையுமாய் முதிர்ந்து தோன்று, மக்கோலம்" (வி. பா. அருச்சுனன் தீர்த்த. 55)

40. கூடம் : "ஒல்லாக் கூடமு மொருங்குதலைப் பிணங்கி" (பெருங். 2. 12 : 45)

41. பெரும்பாண். 119-20 -ஆம் அடிகளின் குறிப்புரைகளைப் பார்க்க.

41 - 2. "வேலி யிட்ட தவர்க ளிட்ட வில்லும் வாளும் வேலுமே" (திருவரங்கக்கலம். 53)

43. பட்டினப். 216.

44. "நெடுங்காழ்க் கண்ட நிரல்பட நிரைத்த, கொடும்பட நெடுமதில்" (சிலப். 27 : 151-2) : "காழொடு சேர்த்த, கண்டப் பூந்திரை மண்டபத் திழைத்த, நன்னகர்", "கண்டப் பூந்திரை காழ்முதற்கொளீஇ", "பல்காழ்த் திரையும்" (பெருங். 1.42 : 105-7, 2.4 : 134. 12 : 44)

46-7. "இடும்பறக் கழுவி யெஃகி னிருளற வடிக்கப் பட்ட, வரும்பெறற் சுரிகை யம்பூங் கக்சிடைக் கோத்து வாங்கி" (சீவக. 698)