267
நெய்யுமிழ் சுரையர் நெடுந்திரிக் கொளீஇக்
கையமை விளக்க நந்துதொறு மாட்ட
50நெடுநா வொண்மணி நிழத்திய நடுநா
ளதிரல் பூத்த வாடுகொடிப் படாஅர்
சிதர்வர லசைவலிக் கசைவந் தாங்குத்
துகின்முடித்துப் போர்த்த தூங்க லோங்குநடைப்
பெருமூ தாள ரேமஞ் சூழப்
55பொழுதளந் தறியும் பொய்யா மாக்க
டொழுதுகாண் கையர் தோன்ற வாழ்த்தி
யெறிநீர் வையகம் வெலீஇய செல்வோய்நின்
குறுநீர்க் கன்ன லினைத்தென் றிசைப்ப

48. "சொரிசுரை கவரு நெய்வழி புராலில்" (பதிற். 47: 5)

49. (பி-ம்.) ‘மாட்டி'

50. (பி-ம்.) ‘நெடுநாவெண்மணி', ‘மிழற்றிய நடுநாள்', ‘நிழத்தலினடுநாள்',‘நிழற்றிய'

"நெடுநா வொண்மணி கடிமனை யிரட்ட", "யாமங் கொள்பவர் நெடுநா வொண்மணி யொன்றெறி பாணியி னிரட்டும்" (நற். 40 : 1. 132 ; 9-10)

51. அதிரல் : குறிஞ்சிப். 75.

54. பெருமூதாளர் : "பெருமூ தாளரே மாகிய வெமக்கே" (புறநா. 243: 14) : "பெருமூ தாள, னேர்ந்ததை யெல்லா நெடுந்தகைக் குரைப்ப", "பெருமூ தாளரும் பெருங்கிளைச் சுற்றமும்" (பெருங். 1. 34 : 110-11, 57: 17)

53-4. "பைந்துகின் முடியணிந் தவர்பின், உலவு காஞ்சுகியவர்" (சீவக. 1558)

55 - 8. "சூதர் வாழ்த்த மாகதர் நுவல, வேதா ளிகரொடு நாழிகை யிசைப்ப" (மதுரைக். 670-71) : "குறுநீர்க் கன்ன லெண்ணுந ரல்லது, கதிர்மருங் கறியா தஞ்சுவரப் பாஅய்" (அகநா. 43: 6-7) ; "நாழிகைக் கணக்கர்", "ஐந்து கேள்வியு மமைந்தோ னெழுந்து, வெந்திறல் வேந்தே வாழ்கநின் கொற்ற, மிருநில மருங்கின் மன்னரெல்லாநின், றிருமலர்த் தாமரைச் சேவடி பணியு, முழுத்த மீங்கிது முன்னிய திசைமே, லெழுச்சிப் பாலை யாகென் றேத்த" (சிலப். 5 : 49, 26 : 26-31) ; "குறுநீர்க் கன்னலின் யாமங் கொள்பவர்" (மணி. 7: 64-5) ; "கொலைமுகக் களிற னாற்கு நாழிகை சென்று கூற" (சீவக. 2733) ; "புன லுற்றுருகு செப்பின், காலமறி வுற்றுணர்தல் கன்னலள வல்லான், மாலைபக லுற்றதென வோர்வரிது மாதோ" (கம்ப.