| மத்திகை வளைஇய மறிந்துவீங்கு செறிவுடை | 60 | மெய்ப்பை புக்க வெருவருந் தோற்றத்து வலிபுணர் யாக்கை வன்கண் யவனர் புலித்தொடர் விட்ட புனைமா ணல்லிற் றிருமணி விளக்கங் காட்டித் திண்ஞா ணெழினி வாங்கிய வீரறைப் பள்ளியு | 65 | ளுடம்பி னுரைக்கு முரையா நாவிற் படம்புகு மிலேச்ச ருழைய ராக மண்டமர் நசையொடு கண்படை பெறாஅ தெடுத்தெறி யெஃகம் பாய்தலிற் புண்கூர்ந்து பிடிக்கண மறந்த வேழம் வேழத்துப் | 70 | பாம்புபதைப் பன்ன பரூஉக்கை துமியத் |
கார்காலப். 73) ; "பூமென் கணையும் பொருசிலையும் கைக்கொண்டு, காமன் றிரியுங் கருவூரா-யாமங்க, ளொன்றுபோ யொன்றுபோ யொன்றுபோய் நாழிகையு, மொன்றுபோ யொன்றுபோ யொன்று" (சிலப். 5: 49, அடியார். மேற்.) 60. மெய்ப்பை புக்கு : "படம்புகு மிலேச்சர்" (முல்லை. 66) ; "மெய்ப்பை புக்கு" (சிலப். 16 :107) 66. (பி - ம்.) ‘மிலைச்சர்' படம்புகும் : (பெரும்பாண். 69) ; "செங்கட் புன்மயிர்த் தோறிரை செம்முக, வெங்க ணோக்கிற்குப் பாயமி லேச்சனைக், செங்கட்டீவிழி யாத்தெழித் தான்" (சீவக. 431) 67. "செருவேட்டுச் சிலைக்குஞ் செங்க ணாடவர்" (அகநா. 157 : 4) ; "போரெனிற் புகலும் புனைகழன் மறவர்" , "பொதுவிற் றூங்கும் விசியுறு தண்ணுமை, வளிபொரு தெண்கண் கேட்பி , னதுபோ ரென்னுமென்னையு முளனே", "வாள்வடு விளங்கிய சென்னிச், செருவெங் குருசில்" (புறநா. 31: 9 . 89 :7-9 . 321: 9-10) ; "போரென்ன வீங்கும் பொருப்பன்ன திரள்கொ டிண்டோள்" (கம்ப. பூக்கொய். 18) ; "செருவென்ற மாற்றங் கேட்டுச் சிந்தையி னுவகை பொங்க, மருவொன்று மலங்கன் மார்பும் வாகுபூ தரமும் பூரித்து .......... ஒருப்பட்டான்" (வி. பா. நிவாதகவசர். 17) 69. (பி-ம்.) ‘வேழமும்' 70. யானைத்துதிக்கைக்குப் பாம்பு : "யானைதன், வாய்நிறை கொண்ட வலிதேம்பு தடக்கை, குன்றுபுகு பாம்பிற் றோன்றும்" (அகநா. 391 : 11-3) ; "நிரைகதிர் நீளெஃக நீட்டி வயவர், வரைபுரை யானைக்கைந் நூற-வரைமே, லுருமெறி பாம்பிற் புரளுஞ் செரு
|